சொத்து குவிப்பு வழக்கு: சிபிஐ மனு டிஸ்மிஸ்- ஹேப்பி மோடில் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார்!
டெல்லி: கர்நாடகா காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் மாநில துணை முதல்வருமான டிகே சிவகுமார் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு விசாரணைக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிரான சிபிஐ மனு மீது உச்சநீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது. இதனால் டிகே சிவகுமார் மீதான வழக்கு விசாரணைக்கான கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தடை தொடருகிறது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது மற்றும் அன்னிய செலாவணி மோசடி உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் கடந்த 2017-ம் ஆண்டு டிகே சிவகுமாருக்கு சொந்தமான வீடு, நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இவ்வழக்கில் அமலாக்கத்துறை உள்ளிட்டவை விசாரணை நடத்திய பிறகு 2019-ம் ஆண்டு டிகே சிவகுமார் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் தம் மீதான விசாரணைக்கு தடை கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சிவகுமார் மனுத் தாக்கல் செய்தார். இதனை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 10-ந் தேதி சிவகுமார் மீதான விசாரணைக்கு தடை விதித்தது கர்நாடகா உயர்நீதிமன்றம். இந்த தடை உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
டிகே சிவகுமார் வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. உச்சநீதிமன்றம், தொடக்கம் முதலே கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து வந்தனர். மேலும் இவ்வழக்கு விசாரணையும் ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
இன்றும் உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிஆர் கவாய், சிடி ரவிக்குமார் மற்றும் சஞ்சய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், சிபிஐ-ன் மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது. அப்போது சிபிஐ மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து, கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவில் தலையிட மறுத்துவிட்டனர். இதனால் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் தரப்புக்கு நிம்மதி கிடைத்துள்ளது.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம்












Click it and Unblock the Notifications