NO MEANS NO.. அஜித் பாணியில் ராஜ்யசபாவில் பேசிய திமுக எம்பி அப்துல்லா... ஸ்மிரிதி இராணி சொன்ன பதில்!
டெல்லி; திமுக எம்பி எம்எம் அப்துல்லா நேற்று மாநிலங்களவையில் marital rape எனப்படும் திருமண பாலியல் வன்கொடுமை குறித்து பேசியது அதிக கவனம் பெற்றுள்ளது.
இந்தியாவில் தற்போது marital rape குறித்த வாதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
அதாவது கிரிமினல் சட்டத்தில் இதற்கு என்று மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. திருமணத்திற்கு பின் மனைவியின் விருப்பம் இன்றி கணவன் தனது மனைவியுடன் பாலியல் உறவு வைப்பது அல்லது பாலியல் உறவு வைத்துக்கொள்ள வற்புறுத்துவது "திருமண பாலியல் வன்கொடுமை -marital rape" என்ற அழைக்கப்படுகிறது.

எதிர்ப்பு
இந்த marital rape சட்டம் குறித்த விவாதங்கள் இப்போது அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் இதை பற்றி இருந்தார். ஒரு பெண்ணின் அனுமதி இன்றி அவரை தொட கூடாது. consent என்பது மிக மிக அவசியம் ஆனது. இந்தியாவில் அதை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இது மிக மிக அவசியமானது என்று குறிப்பிட்டு இருந்தார். அதாவது பெண்ணின் அனுமதி இன்றி அவரை தொட கூடாது என்று marital rape குறித்து ராகுல் காந்தி பேசி இருந்தார்.

திமுக எம்பி
இந்த நிலையில் நேற்று திமுக எம்பி எம்எம் அப்துல்லா மாநிலங்களவையில் இதை பற்றி பேசினார். திருமணத்திற்கு பின்பு பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்களும் குற்றமே. அது குறித்த விழிப்புணர்வைப் பெண்களுக்கு ஏற்படுத்த வேண்டும். பெண் ஒருவர் நோ என்று சொன்னால் அதன் அர்த்தம் நோதான். மனைவியோ, காதலியோ யார் சொன்னாலும் No means Noதான்.

விழிப்புணர்வு தேவை
marital violence என்பது தவறு என்று சில பெண்களுக்கே தெரியவில்லை. தாங்கள் துன்புறுத்தப்படுகிறோம் என்பது பெண்களுக்கே தெரியவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. இதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகள், கல்லூரிகளில் இதை பற்றிய விவாதத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திமுக எம்பி அப்துல்லா கோரிக்கை விடுத்தார். நடிகர் அஜித் பாணியில் அப்துல்லா நேற்று அவையில் பேசினார்.
Recommended Video

நேர் கொண்ட பார்வை
நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் 'NO MEANS NO' என்ற பதத்தை பயன்படுத்தி இருப்பார். அதை எடுத்துக்காட்டி அப்துல்லா நேற்று அவையில் பேசியது கவனம் பெற்றது. இதற்கு பதில் அளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி, இது தொடர்பாக கிரிமினல் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர ஆலோசனை செய்து வருகிறோம். இது விழுப்புணர்வு நடத்த ஏற்கனவே மாநிலங்களுக்கு நிதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. மாவட்ட அளவிலும் கூட்டங்கள் நடந்து வருகின்றன, ஆனால் எல்லா ஆண்களையும் குற்றவாளிகள் போல் சித்தரிக்க கூடாது, என்று குறிப்பிட்டார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications