கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. லோக்சபாவில் தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை
டெல்லி: கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். ஆட்சி நிர்வாகத்தில் பிற மாநிலங்களுக்கு கருணாநிதி முன்னுதாரணமாக இருந்தார் என்றும் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனவும் லோக்சபாவில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை வைத்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. எஸ்.ஐ.ஆர் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் காரசார வாதங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை
இதனிடையே, இன்று லோக்சபாவில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது:-
திராவிடக் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில் சாம்பியனாக திகழ்ந்தவர் கலைஞர் கருணாநிதி. சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் சாம்பியனாக திகழ்ந்தார். தஞ்சாவூரில் பிறந்த கலைஞர், போட்டியிட்ட எந்த தேர்தலிலும் தோல்வியையே சந்திக்காதவர்.
கலைஞருக்கு பாரத ரத்னா
ஆட்சி நிர்வாகத்தில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருந்தவர் கலைஞர் கருணாநிதி. ஐன்ஸ்டீன் ஒருமுறை காந்தி குறித்து கூறும் போது, இந்த உலகில் பல தலைமுறைகள் வந்து செல்லும். ஆனால், ரத்தமும் சதையுமாக தலைமுறைகள் கடந்து காலம் கடந்து நிற்பவர் மகாத்மா காந்தி போன்று சிலர்தான்.
அது கலைஞர் கருணாநிதிக்கும் பொருந்தும். 60 வருடங்கள் தான் சந்தித்த எந்த தேர்தலிலும் தோல்வி அடையாத கருணாநிதி, அரசியல் மட்டும் இன்றி இலக்கியம் என பலதுறைகளில் ஆளுமை பெற்றவர். அப்படிப்பட்ட அரசியல் தலைவரான கலைஞர் கருணாநிதிக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும். என்று பேசினார்.
பாரத ரத்னா விருது பெற்றவர்கள்
நாட்டின் மிக உயரிய விருதாக பாரத ரத்னா விருது கருதப்படுகிறது. ராஜாஜி, காமராஜர், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட முன்னாள் முதல்வர்களுக்கு ஏற்கனவே பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல நாட்டின் முன்னாள் குடியரசு தலைவரும் ஏபிஜே அப்துல் கலாமுக்கு 1997ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி , லால்பகதூர் சாஸ்திரி, ராஜீவ் காந்தி, அடல் பிஹாரி வாஜ்பாய் உள்ளிட்டோருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications