லடாக் யூனியன் பிரதேசமே சட்டவிரோதமாம்... பரூக் அப்துல்லா சொன்னதை போலவே பேசும் சீனா
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்து லடாக் யூனியன் பிரதேசத்தை இந்தியா சட்டவிரோதமாக உருவாக்கிவிட்டதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், லடாக் மற்றும் அருணாசல பிரதேசங்களில் புதிய பாலங்களை திறந்து வைத்தார். நாட்டின் எல்லைப் பகுதிகளில் மொத்தம் 48 பாலங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்தியாவுக்கு சீனா எதிர்ப்பு
இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு உடனடியாக சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறியதாவது:

லடாக்கை ஏற்க போவதில்லை
இந்தியாவில் சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தை சீனா ஒருபோதும் அங்கீகரிக்காது. அருணாசலப் பிரதேசத்தைப் போலவே லடாக் யூனியன் பிரதேசத்தையும் ஏற்க முடியாது.

மோதல் போக்கை ஏற்படுத்தும்
எல்லை பகுதிகளில் எந்த ஒரு உள்கட்டமைப்பு பணிகளையும் மேற்கொள்வதையும் சீனா ஏற்காது. ஒருதரப்பாக எல்லைகளில் மேற்கொள்ளப்படும் இந்த பணிகள் மோதல் போக்கை தீவிரப்படுத்தும். எல்லைகளில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் முயற்சிகளை இந்த நடவடிக்கைகள் சீர்குலைக்கும் அபாயம் உள்ளது.

பதற்றத்தை உருவாக்க கூடாது
இப்படியான உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, இதன் மூலமாக ராணுவ குவிப்பை அதிகப்படுத்துவதுதான் தற்போதைய பிரச்சனைகளுக்கே மூல காரணமாகும். இருதரப்பும் ஒப்புக் கொண்டதைப் போல எல்லையில் பதற்றத்தை உருவாக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது. இவ்வாறு ஜாவோ லிஜியான் கூறினார்.

பரூக் அப்துல்லா- சீனா பேச்சு
அண்மையில்தான் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய இந்திய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை மத்திய அரசை நீக்கியதை சீனா ஒப்புக் கொள்ளவில்லை. இதனால்தான் லடாக் எல்லையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சீனாவின் ஆதரவுடன் 370-வது பிரிவு ஜம்மு காஷ்மீர் மீண்டும் அமலாகும் என கூறியிருந்தார். தற்போது பரூக் அப்துல்லாவின் குரலிலேயே சீனாவும் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஜப்பானுக்கு தண்ணி காட்டும் சீனா.. இருந்தது ஒன்னே ஒன்னு அப்போ அதுவும் போச்சா!! -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications