லடாக் யூனியன் பிரதேசமே சட்டவிரோதமாம்... பரூக் அப்துல்லா சொன்னதை போலவே பேசும் சீனா
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்து லடாக் யூனியன் பிரதேசத்தை இந்தியா சட்டவிரோதமாக உருவாக்கிவிட்டதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், லடாக் மற்றும் அருணாசல பிரதேசங்களில் புதிய பாலங்களை திறந்து வைத்தார். நாட்டின் எல்லைப் பகுதிகளில் மொத்தம் 48 பாலங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்தியாவுக்கு சீனா எதிர்ப்பு
இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு உடனடியாக சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறியதாவது:

லடாக்கை ஏற்க போவதில்லை
இந்தியாவில் சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தை சீனா ஒருபோதும் அங்கீகரிக்காது. அருணாசலப் பிரதேசத்தைப் போலவே லடாக் யூனியன் பிரதேசத்தையும் ஏற்க முடியாது.

மோதல் போக்கை ஏற்படுத்தும்
எல்லை பகுதிகளில் எந்த ஒரு உள்கட்டமைப்பு பணிகளையும் மேற்கொள்வதையும் சீனா ஏற்காது. ஒருதரப்பாக எல்லைகளில் மேற்கொள்ளப்படும் இந்த பணிகள் மோதல் போக்கை தீவிரப்படுத்தும். எல்லைகளில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் முயற்சிகளை இந்த நடவடிக்கைகள் சீர்குலைக்கும் அபாயம் உள்ளது.

பதற்றத்தை உருவாக்க கூடாது
இப்படியான உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, இதன் மூலமாக ராணுவ குவிப்பை அதிகப்படுத்துவதுதான் தற்போதைய பிரச்சனைகளுக்கே மூல காரணமாகும். இருதரப்பும் ஒப்புக் கொண்டதைப் போல எல்லையில் பதற்றத்தை உருவாக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது. இவ்வாறு ஜாவோ லிஜியான் கூறினார்.

பரூக் அப்துல்லா- சீனா பேச்சு
அண்மையில்தான் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய இந்திய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை மத்திய அரசை நீக்கியதை சீனா ஒப்புக் கொள்ளவில்லை. இதனால்தான் லடாக் எல்லையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சீனாவின் ஆதரவுடன் 370-வது பிரிவு ஜம்மு காஷ்மீர் மீண்டும் அமலாகும் என கூறியிருந்தார். தற்போது பரூக் அப்துல்லாவின் குரலிலேயே சீனாவும் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
நடுக்கடலில் திடீரென யூடேர்ன் போட்டு இந்தியாவுக்கு திரும்பிய ரஷ்ய எண்ணெய் கப்பல்.. சீனா கடும் ஷாக் -
ஈரான் போர் உச்சத்துல இருக்கு.. ஆனாலும் இந்தியாவில் தங்கம் விலை பெருசா உயரல! காரணம் இதுதான்! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
ஈரானுக்கு ஆதரவாக உள்ளே வரும் சீனா.. மிக பெரிய ட்விஸ்ட் கொடுத்த ஜின்பிங்.. அடுத்து என்ன நடக்கும்? -
வளைகுடா இந்தியர்களுக்கு மேஜர் அறிவிப்பு.. கத்தாரிலிருந்து சவுதி அரேபியா வழியாக நாடு திரும்ப ஏற்பாடு -
மூதாட்டியை மிரட்டிய ரோபோ.. கைது செய்து கூட்டி சென்ற அதிகாரிகள்.. பரபரப்பை கிளப்பிய வீடியோ












Click it and Unblock the Notifications