ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- அதிர்ந்தன காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஆப்கானிஸ்தானில் இன்று காலை 10.19 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பஞ்சாப், காஷ்மீர், ஹரியானா உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
ஆப்கானிஸ்தானின் பைசாபாத் நகரில் இருந்து 70 கி.மீ தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.9 அலகுகள் பதிவாகி இருந்தது.
இதேபோல பாகிஸ்தானின் இஸ்லாமபாத், பலுசிஸ்தான், பஞ்சாப் மாகாணங்களிலும் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.3 ஆகப் பதிவானது

இந்த நிலநடுக்கத்தால் இந்தியாவின் காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. ஏற்கனவே இமயமலையின் உத்தரகாண்ட் மாநிலத்தில் எப்போது வேண்டுமானாலும் மிகப் பயங்கர நிலநடுக்கம் ஏற்படக் கூடும் என எச்சரிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த நில அதிர்வு பீதியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications