வேலூரில் தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த முடியாது- தேர்தல் ஆணையம் விளக்கம்
Recommended Video
டெல்லி: வேலூரில் தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
வேலூரில் கடந்த மாதம் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிலும் அவரது மகனும் வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்தின் பள்ளி, கல்லூரியிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இதில் 10 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
அது போல் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசனின் வீட்டிலும் ரூ 11 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து வேலூரில் தேர்தலை நிறுத்த ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

விளக்கம்
இதுகுறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறுகையில் வேலூரில் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. ஆனால் வேலூரில் சில வேட்பாளர்களும் அரசியல் கட்சியினரும் சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டனர்.

பரிந்துரை
இந்த சூழலில் வேலூரில் லோக்சபா தேர்தலை நடத்த அனுமதித்தால் அது சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடத்துவதற்கான சூழலை மிகக் கடுமையாக பாதிக்கும். எனவே இந்திய அரசியலமைப்புச் சட்டம் 324 பிரிவு 21-இன் கீழ் தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் வேலூரில் தேர்தலை ரத்து செய்யுமாறு ஜனாதிபதிக்கு பரிந்துரைத்தோம்.

ரத்து செய்தோம்
அதை ஏற்று வேலூரில் தேர்தல் நடத்துவதற்கான அறிவிக்கையை ஜனாதிபதி ரத்து செய்துள்ளார். இதன் மூலம் மக்களவை தேர்தலை ரத்து செய்துள்ளோம்.

விளக்கம்
மேலும் லோக்சபா தேர்தலை நடத்துவதற்கான அறிவிக்கை பட்டியலில் இருந்து வேலூர் லோக்சபா தொகுதி மட்டும் நீக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications