2 மக்களவை தொகுதிகளுக்கும், 14 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 17-ல் இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம்!
டெல்லி: வருகிற ஏப்ரல் 17-ம் தேதி 14 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 2 மக்களவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
ஆந்திராவின் திருப்பதி மக்களவை தொகுதிக்கும், கர்நாடகாவில் உள்ள பெல்காம் மக்களவை தொகுதிக்கும் ஏப்ரல் 17 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 64 வயதான ஒய்.எஸ்.ஆர்.சி எம்.பி. பல்லி துர்கா பிரசாத் கடந்த ஆண்டு செப்டம்பரில் கொரோனாவால் உயிரிழந்ததால் திருப்பதி மக்களவை தொகுதி காலியானது.

தொடர்ந்து 4 முறை பெல்காம் மக்களவைத் தொகுதி எம்.பியாக இருந்த ம்,முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி கொரோனா காரணமாக மரணம் அடைந்ததால் அந்த தொகுதியும் காலியாக இருந்தது. இதேபோல் 11 மாநிலங்களில் 14 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 17 ம் தேதி இடைத்தேர்தல்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குஜராத், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, மிசோரம், ராஜஸ்தான், நாகாலாந்து, ஒடிசா, தெலுங்கானா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மக்களவை தொகுதி மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத் இடைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ஆம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications