கியூட்- மாநிலங்களின் உரிமையை பறிக்காது.. அமைச்சர் பொன்முடிக்கு அமைச்சர் பிரதான் கடிதத்தில் உறுதி!
டெல்லி: கியூட் தேர்வால் மாநில உரிமை பறிக்கப்படாது என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதை கைவிடக் கோரி தமிழக சட்டப்பேரவையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வால் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் உரிமை பாதிக்கப்படாது என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார்.

தேசியக் கல்விக் கொள்கை
அந்த கடிதத்தில் அவர் கூறுகையில் தேசியக் கல்விக் கொள்கை 2020, பல்வேறு நிபுணர்களுடன் விரிவான மற்றும் அதிக பங்கேற்பு கலந்தாய்வு செயல்முறைக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். அதன்படி 2020 தேசிய கல்விக் கொள்கையின்படி, பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (கியூட்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

13 மொழிகள்
பொதுப் பட்டியலில் கல்வி இருப்பதால் அதை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் மத்திய பல்கலைக்கழகங்களில் 13 மொழிகளில் பொது நுழைவுத் தேர்வு எழுத வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாறாக இந்த கியூட் தேர்வு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் உரிமையை பாதிக்காது.

விண்ணப்பங்கள்
ஒரே விண்ணப்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இதனால் ஏழை மாணவர்களின் நிதிச் சுமை குறையும். குறிப்பாக கோச்சிங் சென்று பயிற்சி பெறும் முறையை ஒழிக்கும் நோக்கத்திற்காகவே பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டது என விளக்கியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
இந்த கியூட் தேர்வு, நீட் தேர்வு உள்ளிட்டவைகளை நீக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். எல்லாவற்றிற்கும் நுழைவுத் தேர்வு வைத்தால் பிறகு பள்ளி படிப்பு எதற்கு என மக்களும் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பிரதான் விளக்கமளித்துள்ளார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications