தமிழகத்தில் இருந்து 3,000 ஈழத் தமிழரை திருப்பி அனுப்ப நடவடிக்கை: இலங்கை அமைச்சர் தினேஸ் குணவர்த்தன
டெல்லி: தமிழகத்தில் இருந்து 3,000 ஈழத் தமிழரை திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இலங்கை அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தில் தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழருக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்பது கோரிக்கை. இதனை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஸ் குணவர்த்தன 2 நாட்கள் பயணமாக நேற்று இந்தியா வருகை தந்தார். அவர் டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.
அப்போது, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுதலை, தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் முகாம்களில் உள்ள 3,000 ஈழத் தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என தினேஸ் குணவர்த்தன கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என சட்டசபையில் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆளும் அதிமுகவின் நிலைப்பாடாகவும் இது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ஈழத் தமிழரை திருப்பி அனுப்பும் விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications