பெண் எஸ்பியை தடுத்து நிறுத்திய செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் சஸ்பெண்ட்.. இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி
டெல்லி: செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி கண்ணனை இந்திய தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்டா மாவட்ட சுற்றுப்பயணம் சென்றபோது உடன் சென்றார். அப்போது அவரை வரவேற்க வந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் ராஜேஷ் தாஸ் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக தெரிகிறது.

டிஜிபி
இவரது அத்துமீறல் குறித்து சென்னையில் உள்ள டிஜிபியிடம் புகார் அளிக்க தனது காரில் பெண் எஸ்பி சென்ற போது பரனூர் சுங்கச்சாவடியில் செங்கல்பட்டு எஸ் பி கண்ணன் வழிமறித்து டிஜிபியிடம் புகார் கூற வேண்டாம் என அவரது காரை வழிமறித்ததாக தெரிகிறது.

புகார்
மேலும் செங்கல்பட்டு டிஎஸ்பி மூலம் பெண் எஸ்பியின் கார் சாவியையும் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து செங்கல்பட்டு எஸ்பி கண்ணன், அவருடன் இருந்த டிஎஸ்பி , இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபி திரிபாதியிடம் புகார் அளித்துள்ளதார்.

நியமனம்
இதையடுத்து புகாருக்கு ஆளான எஸ்.பி கண்ணன் தற்போது செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பதவியில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வணிக குற்றப்பிரிவிற்கு அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் ஆணையம் அதிரடி
இந்த நிலையில் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக தேர்தல் ஆணையத்திற்கு காவல் ஆணையர் கடிதம் எழுதினார். இதையடுத்து தமிழக தேர்தல் ஆணையரின் பரிந்துரையின் பேரில் கண்ணனை இந்திய தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications