3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகள் உடனே இடமாற்றம்.. தேர்தல் ஆணையம் அதிரடி
டெல்லி: தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கும் வரும் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற போகிறது. இதன் காரணமாக தேர்தல் பணிகளை இந்திய தேர்தல் கமிஷன் தீவிரப்படுத்தியுள்ளது. மார்ச் மாதத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. எனவே 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை உடனே இடமாற்றம் செய்யுமாறு மாநில தலைமைச் செயலர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, சொந்த மாவட்டங்களில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது விதிமுறையாகும். அதனைத்தான் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில தலைமைச் செயலாளர்கள், தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பி இருக்கிறது. அதில் கூறுகையில், "தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தலை நடத்தும் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் யாரும் சொந்த மாவட்டத்தில் பணியில் இருந்தால் அங்கு பணியைத் தொடர அனுமதிக்கக்கூடாது.
அதேபோன்று குறிப்பிட்ட ஒரு மாவட்டத்தில் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியில் இருப்பவர்களும் வேறு இடத்துக்கு இடமாறுதல் செய்யப்பட வேண்டும். மாநில தலைமையகத்தில் பணியாற்றுபவர்களை இந்தக் கணக்கில் எடுக்க வேண்டியது இல்லை.
3 ஆண்டுகள் பணியை நிறைவு செய்பவர்கள் என்ற பட்டியலில் வரும் அதிகாரிகளை, அதே வருவாய் மாவட்டம் என்றாலும் மாநில தலைமையகத்திற்கு பணியிட மாற்றம் செய்யலாம். இதுபோன்ற நடவடிக்கைகளின் போது, சம்பந்தப்பட்ட அதிகாரி சொந்த மாவட்டத்துக்குப் பணியிட மாறுதலாகிச் செல்லாதவாறு அதிகாரிகள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் போன்ற அதிகாரிகளை, கடந்த சட்டமன்ற தேர்தல் அல்லது இடைத்தேர்தலின் போது நியமிக்கப்பட்டிருந்த இடத்தில் கண்டிப்பாக நியமிக்கக்கூடாது.
இந்த உத்தரவு, தேர்தல் பணிக்காக நியமிக்கப்படும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள், வாக்குப்பதிவு அலுவலர்கள், உதவி வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மட்டுமல்லாமல் துணை ஆட்சியர்கள், தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அவர்களுக்கு இணையான பதவி நிலையில் உள்ள மாவட்ட அதிகாரிகளுக்கும், மாநகராட்சி, நகராட்சி ஆணையர், மாநகராட்சி மற்றும் மேம்பாட்டு ஆணையங்களின் அலுவலர்களுக்கும், காவல் துறையில் கூடுதல் டி.ஜி.பி. முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான அதிகாரிகளுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை காவலர்களுக்கும் பொருந்தும்.
கணினி பணி, சிறப்புப் பிரிவு பணி, பயிற்சி ஆகியவற்றில் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது, காவல் துறை அதிகாரிகளையும் சொந்த மாவட்டத்தில் பணியமர்த்தக்கூடாது. தேர்தலுடன் நேரடித் தொடர்பில் இல்லாத டாக்டர், என்ஜினீயர், ஆசிரியர், கல்வி நிறுவன முதல்வர் ஆகியோருக்கு இந்த உத்தரவு பொருந்தாது. என்றாலும், அவர்கள் மீது அரசியல் சார்புத்தன்மை தொடர்பான குற்றச்சாட்டு இருக்கக்கூடாது. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வரும்பட்சத்தில் விசாரணை நடத்தி, அதில் உண்மை இருப்பது தெரியவந்தால் அவர்களைப் பணியிடமாற்றம் செய்வது மட்டுமல்லாமல் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். அதிகாரிகள், நேர்மையாகப் பட்சபாதமின்றிச் செயல்படுவதைத் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
எந்த அதிகாரி மீதாவது தேர்தல் ஆணையம் ஏற்கனவே ஒழுங்கு நடவடிக்கைக்காக உத்தரவிட்டு, அது நிலுவையில் இருந்தாலோ அல்லது அவர் தண்டிக்கப்பட்டு இருந்தாலோ, முந்தைய தேர்தல் பணியில் சரிவரச் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானவராக இருந்தாலோ அவர்களைத் தேர்தல் பணிக்கு நியமிக்க கூடாது.
அரசு அலுவலர் மீது, அலுவலர் தொடர்பான கிரிமினல் வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் இருந்தால் அவர்களையும் தேர்தல் பணி தரப்படக்கூடாது. தமிழகத்தில் மே 31-ந் தேதியிலும், புதுச்சேரியில் ஜூன் 30-ந் தேதியிலும் பணி ஓய்வு பெறவுள்ள அலுவலர்களைத் தேர்தல் பணிக்கு நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களைப் பணியிடமாற்றம் செய்யவும் தேவையில்லை.
தலைமை தேர்தல் அதிகாரி தவிர வேறு எந்தவொரு மாநில அரசுப் பணியாளரும் பணி நீட்டிப்பு செய்யப்பட்டிருந்தாலோ, மறுபடியும் பணியில் சேர்க்கப்பட்டவர்களாக இருந்தாலோ அவர்களைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது. சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளை, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னரே பணியிடமாற்றம் செய்யப்பட வேண்டும்.
தேர்தல் பணியில் ஈடுபடும் ஒவ்வொரு அதிகாரியும், மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் 'தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தனக்கு நெருங்கிய சொந்தம் இல்லை' என்ற உறுதிமொழியை வேட்புமனு தாக்கல் முடிந்த 2 நாட்களுக்குள் அளிக்க வேண்டும். தவறான உறுதிமொழி அளித்தவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுகள் அனைத்தும் அமல்படுத்தப்பட்டுள்ளதா? என்பது பற்றிய விரிவான அறிக்கையை வரும் பிப்ரவரி 28-ந் தேதிக்குள் தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி. அளிக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
மதுக்கடைகளுக்கு தேர்தல் ஆணையம் போடும் கடிவாளம்.. ஓவர் டைம் என புலம்பும் டாஸ்மாக் பணியாளர்கள்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications