நாளை மறுநாள் வெளியாகிறது தேர்தல் தேதி அட்டவணை ?... தேர்தல் ஆணையம் விளக்கம்
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அட்டவணையை 9 ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தல் நடந்த போது மார்ச் மாதம் 5-ஆம் தேதி அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி இந்த ஆண்டும் 5 ஆம் தேதி அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 10 ஆம் தேதிக்குள் தேர்தல் அட்டவணை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, பிரதமர் மோடிக்கு சாதகமாகத் தேர்தல் தேதி அறிவிப்பு தாமதப்படுத்தப்படுகிறது என்றும் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு அறிவிக்கும் வரை தேர்தல் ஆணையம் காத்திருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

தேர்தல் ஆணையம்
மேலும், இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பிரதமர் மோடி நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த சுற்றுப் பயணம் முடிந்த பிறகு தேர்தல் தேதியை அறிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் காத்திருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

உண்மையில்லை
இதற்கு விளக்கமளித்துள்ள தேர்தல் ஆணையம், நாங்கள் பிரதமர் அலுவலகம் ஆலோசனைப்படி செயல்படுகிறோம் என்பதில் உண்மையில்லை என தெரிவித்துள்ளது. மேலும், தேர்தல் அட்டவணையை தயார் செய்து விட்டதாகவும் உரிய நேரத்தில் அது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அட்டவணை
இதற்கிடையே, டெல்லியில் நடக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும், அந்த திட்ட அறிவிப்புகள் ஒப்புதல் பெற்ற பிறகு அரசிதழில் முறைப்படி வெளியிட ஒரு நாள் அவகாசம் தேவை என்பதால் 8 ஆம் தேதி வெளியிடப்படுவதாக இருந்த தேர்தல் அட்டவணையை ஒரு நாள் தள்ளி 9 ஆம் தேதி வெளியிடுவது என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

10 கட்டங்களாக தேர்தல்
கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் ஒன்பது கட்டங்களாக நடத்தப்பட்டது . ஆனால் இந்த முறை 10 கட்டங்களாக தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 21 சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications