சாரதா சிட் பண்ட் பணமோசடி வழக்கு.. நளினி சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்! அமலாக்க துறை உத்தரவு
டெல்லி: சாரதா சிட்பண்ட் வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு சாரதா நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி நிதியைப் பெற்று மோசடி செய்ததாகப் புகார்கள் எழுந்தன.
இந்த நிதி நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக விசாரித்து வருகிறது.
இதற்கிடையே சாரதா குழுமத்திற்கு ரூ. 42 கோடி செலவில் டிவி சேனல் வாங்கும் விவகாரத்தில் சட்ட உதவிகள் வழங்கிய விவகாரத்தில் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கிடையே இப்போது இந்த வழக்கில் நளினி சிதம்பரத்திற்குச் சொந்தமான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. முன்னாள் அமைச்சர் ப சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ தேபேந்திரநாத் பிஸ்வாஸ் மற்றும் அசாம் முன்னாள் அமைச்சர் மறைந்த அஞ்சனுக்கு சொந்தமான நிறுவனம் ஆகியோரின் ரூ 6 கோடிக்கும் அதிகமான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்களுக்குச் சொந்தமான ₹ 3.3 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்கள், ₹ 3 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களைப் பறிமுதல் செய்ய அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications