சில நாட்கள் மட்டுமே நடந்தாலும் சிறப்பு கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது - பிரதமர் மோடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் சில நாட்கள் மட்டுமே நடந்தாலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி கூறினார்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால பயணம் குறித்து விவாதிக்கப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Even if it is only for a few days, the special session is important - PM Modi

எனினும், அறிவிக்காமல் திடீரென சில மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் சந்தேகம் தெரிவித்து வருகின்றன. இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி கூறியதாவது:- சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியாவின் மூவர்ண கொடி நிலவிலும் பறக்கிறது. சில நாட்கள் மட்டுமே நடந்தாலும் சிறப்பு கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது குறித்து விவாதிக்க வேண்டும். சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகள் எடுக்கப்பட உள்ளது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+