எக்ஸிட் போல் முடிவுகள்: பாஜகவுக்கு 'மறுவாழ்வு' கொடுக்கிறது இந்தி பேசும் மாநிலங்கள்?
Recommended Video
டெல்லி: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்தி பேசும் மாநில வாக்காளர்கள் இம்முறையும் அமோக ஆதரவு அளிக்கின்றனர் என்கின்றன தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்.
லோக்சபா தேர்தலின் போது இந்தி பேசும் மாநிலங்கள் இம்முறை பாஜகவை கைவிடும் என கணிப்புகள் கூறின. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி கூட்டணியால் பாஜகவுக்கு பலத்த அடி விழும் என்றே கூறப்பட்டது.

அதேபோல் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி, பாஜகவுக்கு தோல்வியை ஏற்படுத்தும் என கூறப்பட்டது. ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் பாஜக தோல்வியைத் தழுவியது.
இதனை முன்வைத்து பாஜகவின் வாக்கு சதவீதம் குறையும்; குறைவான இடங்கள்தான் பாஜகவுக்கு கிடைக்கும் என ஊடகங்கள் சுட்டிக்காட்டின. ஆனால் தற்போதைய எக்ஸிட் போல் முடிவுகளோ பாஜகவை தொடர்ந்து இந்தி பேசும் மாநிலங்கள் ஆதரிப்பதாக கூறுகின்றன.
மேற்கு வங்கம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கோட்டை அல்ல என்பதையும் பாஜக கணிசமான இடங்களில் வெல்லக் கூடும் என்கின்றன எக்ஸிட் போல் முடிவுகள். தென்னிந்தியாவில் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் பாஜகவை நிராகரித்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications