ஸ்ரீநகரில் மீண்டும் வெடிச்சத்தம்.. தாக்குதல் நிறுத்தம் என்ன ஆனது? உமர் அப்துல்லா ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: இன்று மாலை 5 மணியளவில் இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்டு வந்த மோதல் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தாக்குதல் நிறுத்தம் செய்து 3 மணி நேரத்துக்குள் காஷ்மீரில் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் தாக்குதல் நிறுத்தம் என்ன ஆனது என்றும் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்கு கடந்த புதன்கிழமை இந்தியா பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 4 நாட்களாக இந்த தாக்குதல் நடந்து வந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்டு வந்த மோதல் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.

explosions-heard-again-in-srinagar-what-happened-to-ceasefire-omar-abdullah-asks

இந்த நிலையில் தாக்குதல் நிறுத்தம் செய்து 3 மணி நேரத்துக்குள் காஷ்மீரில் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதனால் ஆவேசமான ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, தாக்குதல் நிறுத்தம் என்ன ஆனது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக தாக்குதல் நிறுத்தம் என்று இருநாடுகளும் அறிவித்ததற்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வரவேற்பு தெரிவித்து இருந்தார். மேலும் சேதமடைந்த இடங்களை பார்வையிட்டு மீட்பு பணிகளை செய்ய வேண்டும். மேலும் இந்த பேச்சுவார்த்தையானது முன்னதாகவே நடந்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறுகையில், "இந்தியா- பாகிஸ்தான் இடையேயான ஏற்பட்டுள்ள தாக்குதல் நிறுத்த முடிவை நான் வரவேற்கிறேன். இந்த தாக்குதல் நிறுத்த முடிவு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பு வந்திருந்தால், உயிர் சேதங்கள், பொருட் சேதங்கள் ஏற்படாமல் தவிர்த்து இருக்கலாம். மக்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது ஜம்மு காஷ்மீரின் அரசின் கடமையாகும்" என்று உமர் அப்துல்லா பதிவிட்டு இருந்தார்.

ஆனால் தாக்குதல் நிறுத்த அறிவிப்பு நிறுத்தப்பட்ட சிறிது நேரத்த்தில் மீண்டும் பாகிஸ்தான் அடாவடியாக தாக்குதல் நடத்தியிருப்பதற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் எல்லை தாண்டி பாகிஸ்தான் நடத்திய தாகுதலில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+