தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்ட 19 லட்சம் பேர்.. கைது செய்யப்படமாட்டார்கள்.. வெளியுறவுத் துறை
டெல்லி: தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்ட 19 லட்சம் பேர் கைது செய்யப்படமாட்டார்கள் என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் வசிக்கும் மக்களின் குடியுரிமையை உறுதி செய்யும் தேசிய குடிமக்கள் பதிவேடு நேற்றுமுன் தினம் வெளியிடப்பட்டது. அதில் 3.11 கோடி பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில் 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டன. இதனால் இவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இந்த நிலையில் அசாம் அரசோ, விடுபட்ட 19 லட்சம் பேரும் வெளிநாட்டு தீர்ப்பாயத்தில் இந்திய குடிமக்கள் என்பதை நிரூபிக்க 120 நாட்களுக்குள் முறையிடலாம் என்றும் உண்மையான குடிமக்களுக்கு அரசு உதவி செய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
எனினும் 19 லட்சம் பேரும் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகினர். இது தொடர்பாக வெளிநாட்டு ஊடகங்களில் வெளியான சில தவறான தகவல்களை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சுட்டிக் காட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகம் கூறுகையில் பதிவேட்டில் இடம் பெறாதவர்கள் கைது செய்யப்படமாட்டார்கள். அவர்கள் ஏற்கெனவே அனுபவித்து வந்த சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும்.
அசாம் மாநிலத்தில் 200 சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெறவுள்ளது. இதில் பெயர் விடுபட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் மனு அளித்து தங்கள் பெயர்களை பதிவேட்டில் சேர்த்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications