ஸ்டிரிட்..! புதிய ஐடி விதிகள்.. 3 கோடி பதிவுகளை தூக்கிய பேஸ்புக்.. இன்ஸ்டா & கூகுள் நடவடிக்கை என்ன
டெல்லி: புதிய ஐடி விதிகளின் கீழ் கடந்த மே 15 முதல் ஜூன் 15 வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் மூன்று கோடி பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய ஐடி கொள்கையை அறிவித்தது. இந்த புதிய கொள்கைகளுக்கு ஏற்றப்படி டிஜிட்டல் நிறுவனங்கள் மாற்றிக் கொள்ள 3 மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த விதிகளை ட்விட்டர் தவிர பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துவிட்டன.

ஐடி விதிகள்
இந்த புதிய ஐடி விதிகளின் கீழ் பயனாளர்களின் புகார்களின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை டிஜிட்டல் நிறுவனங்கள் மாதம் ஒரு முறை சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில், மே 15 முதல் ஜூன் 15 வரை புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேஸ்புக் நிறுவனம் இடைக்கால அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. விரிவான அறிக்கை வரும் ஜூலை 15ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவித்துள்ளது.

மூன்று கோடி பதிவுகள்
அதில் சுமார் 3 கோடி பதிவுகளுக்கு எதிராக பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், ஒரு பதிவு குறித்து பயனாளி ஒருவர் புகார் அளிப்பதற்கு முன்னரே, பேஸ்புக் நிறுவனத்தின் AI தொழில்நுட்பத்தின் மூலம் 96.4-99.9 % வரை பதவிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து சுமார் 20 லட்சம் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Array
கூகுள் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கு மொத்தம் 27,762 புகார்கள் பெறப்பட்டுள்ளன.அதில் இந்திய விதிகளை மீறியதாக சுமார் 59 ஆயிரம் கண்டென்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் கூ தளம் தனக்கு 5,502 புகார்கள் வந்ததாகவும் வன்முறையைத் தூண்டும் வகையில் இருந்த 54,235 பதிவுகள் மாற்றி அமைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ட்விட்டர்
மத்திய அரசின் புதிய ஐடி சட்டத்தின் கீழ் அனைத்து டிஜிட்டல் நிறுவனங்களும் இந்தியாவைச் சேர்ந்த ஒரு நபரை நோடல் அதிகாரியாக நியமிக்க வேண்டும். பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் ஐடி விதிகளுக்கு உட்படுவதாக அறிவித்துவிட்டன. இருப்பினும், டவிட்டர் நிறுவனம் மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட மறுக்கிறது. இதனால் ட்விட்டர் நிறுவனத்திற்கும் மத்திய அரசுக்கும் மோதல் போக்கே நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications