ரூ40,000 கோடியை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பிய பட்னாவிஸ்.. பாஜக எம்.பி. பேச்சால் சர்ச்சை
பெங்களூரு: தமது 80 மணிநேர ஆட்சியில் ரூ40,000 கோடியை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பினார் தேவேந்திர பட்னாவிஸ் என பாஜக எம்.பி. அனந்த் குமார் ஹெக்டே பேசியிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
கர்நாடகாவில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய அனந்த் குமார் ஹெக்டே,, ரூ40,000 கோடி பணத்தை மத்திய அரசுக்கு 80 மணிநேர ஆட்சியில் பட்னாவிஸ் திருப்பி அனுப்பினார் என கூறியிருந்தார். இது மகாராஷ்டிராவில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

இந்த நிதியை திருப்பி அனுப்புவதற்காகவே பட்னாவிஸ் திடீரென முதல்வராக பதவியேற்றார் என்பது அனந்த்குமார் ஹெக்டேவின் பேச்சு. ஆனால் பட்னாவிஸ் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பட்னாவிஸ், 80 மணிநேர ஆட்சியில் எந்த நிதியையும் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பவில்லை. மத்திய- மாநில அரசுகளின் நிதிப் பரிமாற்ற நடைமுறைகளை அறிந்த எவரும் இதுபோல் கருத்து தெரிவிக்க மாட்டார்கள். இது தொடர்பாக மாநில நிதித்துறை விசாரணை நடத்தலாம்.
இத்தகைய கருத்துகளும் அதற்கான விமர்சனங்களும் தவறானது என்றார். என்சிபியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் கூறுகையில், அனந்த் ஹெக்டே கூறுவது சாத்தியமா என தெரியவில்லை. அப்படி ஒன்று நிகழ்ந்திருந்தால் பாஜகவின் உண்மை முகத்தை அது அம்பலப்படுத்திவிடும் என்றார்.
ஏற்கனவே பிரக்யாசிங் தாக்கூரின் கோட்சே தேசபக்தர் என்ற கருத்தை ஆதரித்து ட்வீட் போட்டு சர்ச்சையில் சிக்கியவர்தான் ஆனந்த் ஹெக்டே என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா!












Click it and Unblock the Notifications