126வது நாளாக டெல்லியில் போராட்டம்- உச்சநீதிமன்றத்தில் விவசாய சட்டங்கள் குறித்த ஆய்வு அறிக்கை தாக்கல்
டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் இன்று 126-வது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே உச்சநீதிமன்றத்தில் விவசாய சட்டங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கையை வல்லுநர் குழு தாக்கல் செய்தது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களால் விவசாயிகள் வாழ்வாதாரம் வஞ்சிக்கப்படும் என்பது அச்சம். இதனால் இந்த 3 விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பது கோரிக்கை.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் 126-வது நாளாக இன்றும் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. டெல்லி எல்லைகளை முற்றுகையிட்ட பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இந்த போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த விவசாய சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அத்துடன் உச்சநீதிமன்றமும் இந்த சட்டங்கள் குறித்து ஆராய ஒரு வல்லுநர் குழுவை அமைத்து இருந்தது.
இக்குழுவினர் தங்களது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். கடந்த மார்ச் 19-ந் தேதியன்று சீலிட்ட கவரில் வைத்து உச்சநீதிமன்றத்தில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை மீதான விசாரணை ஏப்ரல் 5-ந் தேதி நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications