ஆவேசமாகும் மத்திய அரசு.. சொன்னதை கேட்காவிட்டால்.. விவசாயிகளுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை.. கறார்!
டெல்லி: விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு மேற்கொண்ட 11-வது சுற்று பேச்சு வார்த்தையும் இன்று தோல்வியில் முடிவடைந்தது.
இதையடுத்து, மத்திய அரசு தனது நிலையில் உறுதி காட்ட ஆரம்பித்துள்ளது. தாங்கள் ஏற்கனவே சொன்ன பரிந்துரையை ஏற்றால் தான் இனிமேல் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

11வது சுற்று பேச்சுவார்த்தை
இதுவரை மத்திய அரசுடன் 10 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில் இன்று 11வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பங்கேற்றார். வெறும் 18 நிமிடங்கள் மட்டுமே இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், பிறகு பெரும்பாலான நேரங்களில் விவசாயிகள் தனி அறைகளில் தான் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

18 மாதங்கள் தளர்வு
18 மாதங்கள் 3 சட்டங்களையும் கிடப்பில் போட தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் மொத்தமாக ரத்து செய்ய வேண்டும் என்பது விவசாய சங்க பிரதிநிதிகள் கோரிக்கையாக இருக்கிறது. இன்றைய தினம் நடைபெற்ற ஆலோசனையின் போதும் இதே கோரிக்கையை விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

மத்திய அரசு கோபம்
இதனால் மத்திய அரசு தரப்பு கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. சட்டத்தில் எந்த ஒரு குறைபாடும் இல்லை என்ற போதிலும் கூட விவசாயிகள் கேட்டுக் கொண்டதால் 18 மாதங்கள் கிடப்பில் போட சம்மதம் தெரிவித்தோம். ஆனால் சிறிய அளவுக்கு கூட விவசாயிகள் இறங்கி வரவில்லை. எனவே மத்திய அரசு சொன்ன இந்த விஷயத்தை ஏற்றுக் கொண்டால் மட்டும் தான் இனிமேல் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் உறுதியாக தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

டிராக்டர் பேரணி
இந்த விவகாரத்தில் மத்திய அரசு முதல் முறையாக, விவசாயிகளிடம் ஆவேசம் அடைந்து உள்ளது குறிப்பிடத் தக்கது. இதனிடையே இன்றைய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்துள்ளதால், ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் நாளன்று டெல்லியில் விவசாயிகள் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications