ஹரியானாவில் இருந்து டெல்லி நோக்கி சென்ற விவசாயிகள் மீது மீண்டும் கண்ணீர்புகை குண்டு வீச்சு- பதற்றம்!
டெல்லி: ஹரியானாவின் ஷம்பு எல்லையில் இருந்து டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தை விவசாயிகள் (விவசாயிகள் போராட்டம்) இன்று மீண்டும் தொடங்கிய நிலையில் போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். போலீசாரின் தடையை மீறி ஆயிரக்கணக்கான விவசாயிகல் டெல்லி நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது போலீசா, விவசாயிகளைத் தடுக்கும் வகையில் தடுப்புகளை அமைத்திருந்தனர். இந்த தடுப்புகளைத் தாண்டி செல்ல முயன்ற ஆயிரக்கணக்கான விவசாயிகள் மீது மீண்டும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி போலீசாரும் பாதுகாப்பு படையினரும் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியே போர்க்களமாக காட்சி தருகிறது.
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வதற்கான சட்டம் இயற்றப்படும் என 3 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அரசு வாக்குறுதி அளித்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் முதல் டெல்லியை நோக்கி செல்லும் போராட்டத்தை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட விவசாயிகள் ஹரியானாவின் ஷம்பு எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் ஷம்பு எல்லையையே போராட்ட களமாக்கி விவசாயிகள் கடந்த ஓராண்டாக முகாமிட்டு போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம் நீதிமன்றங்களின் கதவுகளையும் தட்டி இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஷம்பு எல்லையில் இருந்து டெல்லி நோக்கி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விவசாயிகள் போராட்டத்தை தடுத்து நிறுத்தினர். இதில் ஏராளமான விவசாயிகள் படுகாயமடைந்தனர். இதனால் இந்தப் போராட்டம் நேற்று நிறுத்தி வைக்கப்பட்டது.
#WATCH | Police use tear gas to disperse farmers who began their 'Dilli Chalo' march today, but stopped at the Shambhu border
— ANI (@ANI) December 8, 2024
"We will first identify them (farmers) and then we can allow them to go ahead. We have a list of the names of 101 farmers, and they are not those people… pic.twitter.com/KGpmxDjGD4
அதேநேரத்தில் மத்திய அரசு தங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என்றும் விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனாலும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை.
இதனையடுத்து இன்று மீண்டும் டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்தனர். ஆனால் போலீசார், விவசாயிகளை முன்னேற விடாமல் தடுப்புகள் அமைத்து தடுத்திருந்தனர். இந்த தடுப்புகளை தாணி டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணியாக செல்ல முற்பட்ட போது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை சரமாரியாக வீசி விவசாயிகளைத் தடுத்து நிறுத்தினர். இதனால் ஹரியானாவின் ஷம்பு எல்லைப் பகுதியே போர்க்களமாக காட்சி தருகிறது. ஹரியானாவின் ஷ்ம்பு எல்லையில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
-
Sonia Gandhi: சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. ஹாஸ்பிடலுக்கு விரைந்த ராகுல், பிரியங்கா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications