டெல்லி தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து- தீயணைப்பு வீரர் ஒருவர் பலி- 14 பேர் படுகாயம்
Recommended Video
டெல்லி: டெல்லி பீரகார்கி பகுதியில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீயணைப்பு வீரர் ஒருவர் பலியானார். 14 பேர் படுகாயமடைந்தனர்.
டெல்லி பீரகார்கி பகுதியில் தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து 35 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டன.

மீட்பு நடவடிக்கைகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் இணைந்தனர். தீயை அணைக்கும் போது வெடிவிபத்து ஏற்பட்டதில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கினர். அனைவரையும் பல மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் மீட்டனர்.

இத்தீவிபத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்தார் மேலும் 14 பேர் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில், மிகவும் கவலை தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், தீயணைப்பு வீரர்கள் முழு வீச்சில் மீட்பு பணிகளில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications