இது என்ன வகுப்புவாத மசோதாவா?.. அமித்ஷாவுக்கு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் கண்டனம்
டெல்லி: குடியுரிமை மசோதாவா இல்லை வகுப்புவாத மசோதா என கேட்டு மத்திய உள்துறை அமைச்சர் கர்நாடகத்தை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் எழுதிய கடிதத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
கர்நாடகத்தில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணியாற்றி வந்தநர் சசிகாந்த் செந்தில். இவர் ஜம்மு காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த இவர் கடந்த செப்டம்பரில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் தற்போது குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு இவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். லோக்சபாவில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட நாள், நவீன இந்திய வரலாற்றில் இருட்டு தினமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

தலைகுனிவு
அதோடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிடுகையில் நாட்டின் மதச்சார்பின்மை குறித்து முஸ்லீம்கள் மற்றும் ஆதிவாசி சகோதர, சகோதரிகளின் அச்சத்தை போக்கவில்லை என்பதை நினைத்து இந்த நாட்டின் சார்பில் வெட்கி தலைகுனிகிறேன்.

லோக்சபாவில் மசோதா
லோக்சபாவில் இந்த மசோதாவை தாக்கல் செய்ததன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்துவிட்டது. என்ஆர்சி மசோதாவும் குடியுரிமை மசோதாவும் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஆசிய பிரதேச பதிவு சட்டத்தை ஒத்ததாகும்.

இந்திய அரசு
எனது குடியுரிமையை நிரூபிக்க தேவையான ஆவணங்களை நான் சமர்ப்பிக்க மாட்டேன். அது என்ஆர்சி மசோதாவையும் ஏற்கமாட்டேன். இதை கீழ்ப்படியாமை என நினைத்து இந்திய அரசு நடவடிக்கை எடுத்தால் அதை சந்திப்பேன்.
|
மகிழ்ச்சி
இதனால் நான் இந்த நாட்டின் குடிமகன் இல்லை என அறிவித்தாலும் நாடு முழுவதும் நீங்கள் கட்ட போகும் காவல் தடுப்பு மையங்களை நிரப்புவதில் மகிழ்ச்சி அடைவேன். என் சக மனிதர்கள் மீது வகுப்புவாத விவரக் குறிப்பு, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளை நான் வாயை மூடிக் கொண்டு வேடிக்கை பார்ப்பதை விட அதற்காக சிறைதண்டனை அனுபவிக்க தயார்.

அறிவுறுத்தல்
அரசியல் ஆதாயத்துக்கு பொதுமக்களை சிறுமைப்படுத்தும் இது போல் கடுமையான சட்டத்தை எதிர்த்து தென்னாப்பிரிக்காவில் காந்தி என்ன செய்தாரோ அதைதான் ஒவ்வொரு இந்திய குடிமகனும் செய்ய வேண்டியதாயிருக்கும். இந்த செயல்திட்டத்தில் நீங்கள் வெற்றி காண்பதற்கு முன், காவல் தடுப்பு மையங்களை அதிகமாக உருவாக்குமாறு அறிவுறுத்துகிறேன் என கேட்டுக் கொண்டுள்ளார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications