உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 21,96,956- பிரான்சில் 2,14,542 பேருக்கு தொற்று
டெல்லி: உலக நாடுகளில் ஒருநாள் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,96,956 ஆகும். இதில் பிரான்சில்தான் அதிக அளவாக 2,14,542 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
உலக நாடுகளில் கொரோனா 4-வது அலையும் இந்தியாவில் கொரோனா 3-வது அலையும் தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. உலகம் முழுவதும் நேற்று மட்டும் 21,96,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

உலகம் நாடுகளில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 8,072 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று மட்டும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 20,41,448 ஆகும்.
இதனையடுத்து உலகம் முழுவதும் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 393,536,754 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,751,584 ஆகவும் அதிகரித்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 312,643,874. உலக நாடுகளிலேயே பிரான்சில்தான் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக பதிவாகி உள்ளது. பிரான்சில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,14,542 ஆகும்.
பிரான்ஸை தொடர்ந்து ரஷ்யா, ஜெர்மனி, பிரேசிலில் அதிக கொரோனா பாதிப்பு நேற்று பதிவாகி உள்ளது. ரஷ்யாவில் 177,282; ஜெர்மனியில் 166,620; பிரேசிலில் 154,240 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது.
அதேநேரத்தில் உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் நேற்று மட்டும் 1051 பேர் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவைத் தொடர்ந்து ஒருநாள் கொரோனா மரணங்களில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் 865 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். பிரேசிலில் நேற்று 800 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா, ஓமிக்ரான் உள்ளிட்ட வைரஸ் பாதிப்பை தடுக்க முழு வீச்சில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டும் வருகின்றன. இந்தியாவில் நேற்று காலை நிலவரப்படி, தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் மொத்தம் 168.98 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications