விடாமல் நெருக்கும் எதிர்க்கட்சிகள்.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்க கோரி புதிய நோட்டீஸ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை, பதவியிலிருந்து நீக்கக் கோரி, எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் புதிய தீர்மானத்தை முன்மொழிந்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 73 எம்.பி-க்கள் கையெழுத்திட்ட புதிய நோட்டீஸ், மாநிலங்களவைச் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மார்ச் மாதம் 193 எம்.பி-க்களின் ஆதரவுடன் அளிக்கப்பட்ட இதே போன்ற நோட்டீஸ், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரால் நிராகரிக்கப்பட்டது.

Gyanesh Kumar

இந்நிலையில் தற்போது மீண்டும் எதிர்க்கட்சி எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்திருக்கின்றனர். இந்தமுறை ஞானேஷ்குமார் மீது புதியதாக 9 குற்றச்சாட்களையும் அவர்கள் முன்வைத்திருக்கின்றனர்.

மேற்கு வங்கம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது, ஆளும் பாஜகவுக்கு சாதகமாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இதுதான் 9 குற்றச்சாட்டுகளில் மிக முக்கியமானதாகும்.

அதேபோல, தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயல்படவில்லை என்றும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் விருப்பப்படி செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்திருக்கின்றனர். குறிப்பாக, தலைமைத் தேர்தல் ஆணையரின் செயல்பாடுகள் இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓ பிரையன் ஆகியோர் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கின்றனர்.

என்னதான் எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் மேல் நோட்டீஸ் கொடுத்தாலும் கூட, அவ்வளவு சீக்கிரத்தில் தலைமை தேர்தல் பொறுப்பில் இருப்பவரை தூக்கிவிட முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்குவது என்பது உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்குவதற்கு இணையான கடினமான நடைமுறையாகும்.

ஆணையரை நீக்கவே, மக்களவையில் குறைந்தது 100 எம்பிக்களும், மாநிலங்களவையில் 50 எம்பிக்களும் கையெழுத்திட்டிருக்க வேண்டும். இந்த ஆதரவு கிடைத்த பின்னர், தீர்மானம் ஏற்கப்பட்டால், ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி, ஒரு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் ஒரு சட்ட வல்லுநர் அடங்கிய குழு விசாரணை நடத்தும்.

குழுவின் அறிக்கை அடிப்படையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்புப் பெரும்பான்மை (Special Majority - மொத்த உறுப்பினர்களில் 50% மேல் மற்றும் வாக்களிப்பவர்களில் 2/3 பங்கு) மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே ஜனாதிபதி அவரை நீக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தில் என்னதான் முயற்சி எடுத்தாலும், ஆணையரை நீக்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+