கடந்த முறை 8 கட்டங்களாக.. இந்த முறை 2 கட்டங்களாக தேர்தல்.. மேற்கு வங்கத்தில் அதிரடி மாற்றம் ஏன்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்நாடு, மேற்கு வங்கம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில் இன்று அறிவித்தார். கடந்த 2021 தேர்தலில் மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், தற்போது 2 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்றது. இரண்டே கட்டங்களில் மேற்கு வங்கத்திற்கு சட்டசபை தேர்தல் ஏன் நடத்தப்படுகிறது என்று தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் மேற்கு வங்க தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

From Eight Phases to Two EC Clarifies West Bengal Election Schedule

முதல் கட்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் மார்ச் 30 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறும். மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெறும். மனுவை திரும்ப பெற ஏப்ரல் 9 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். இரண்டாம் கட்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 2-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை நடைபெறும். மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 10-ம் தேதி நடைபெறும். மனுவை திரும்ப பெற ஏப்ரல் 13 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தென் மாநிலங்களை விட வட மாநிலங்களில் தேர்தலின்போது வன்முறை சம்பவங்கள் நடந்தேறும். கள்ள ஓட்டு, ஓட்டு போடுபவர்களுக்கு அச்சுறுத்தல், ஓட்டுச்சாவடி அபகரிப்பு, ஓட்டுச்சாவடி சூறை போன்ற காட்சிகள் நடக்கும். இதன் காரணமாக பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல் பல கட்டங்களாக நடத்தப்படுவது வழக்கமாக இருந்தது. குறிப்பாக, மேற்கு வங்கம், உபி. போன்ற மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை அதிகம் என்பதோடு மக்கள் தொகையும் அதிகம் என்பதால் பல கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது.

கடந்த முறை மேற்கு வங்கத்தில் (2021) 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 2006 ஆம் ஆண்டில் 5 கட்டங்களாகவும், 2011 ஆம் ஆண்டில் 6 கட்டங்களாகவும், 2016 ஆம் ஆண்டில் 7 கட்டங்களாகவும் ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. ஆனால் இந்த முறை அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக 8 என்பது மிகுதியாக குறைக்கப்பட்டு 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை பல கேள்விகளை எழுப்பி இருந்தது. இந்நிலையில் அதற்கான விளக்கத்தையும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார். "தேர்தல் ஆணையம் விரிவான ஆலோசனை நடத்தியது. அனைவருக்கும் வசதியாக இருக்கும் அளவுக்கு ஓட்டுப்பதிவுக்கான காலக்கட்டங்களை, அதன் எண்ணிக்கையை குறைப்பது அவசியம் என்பது கண்டறியப்பட்டது." என ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+