2 வருடங்களுக்கு பின்.. இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலுமாக நீக்கம்.. மாஸ்க் அணிய வேண்டுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொடர்பான முக்கியமான கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்படுகிறது. இன்றிலிருந்து முழு தளர்வுகள் அமலுக்கு வருகின்றன.

Recommended Video

    நோ மாஸ்க்…எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது… முதல் மாநிலமாக அறிவித்த மகாராஷ்டிரா!

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1225 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா கேஸ்களின் எண்னிக்கை 4,30,24,440 ஆக உயர்ந்துள்ளது.

    அதே சமயம் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 14,307 ஆக சரிந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 28 பேர் பலியாகி உள்ளனர்.

     இந்தியா கொரோனா

    இந்தியா கொரோனா

    இந்தியாவில் புதிதாக கொரோனா அலைகள் ஏற்படாத நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது . இந்த மாத தொடக்கத்தில் இது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பினார். அதில், மாநில அரசுகள் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து கொரோனா தொடர்பான அனைத்து விதமான தேசிய பேரிடர் கட்டுப்பாடுகளையும் தளர்த்திக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

    கொரோனா கட்டுப்பாடு

    கொரோனா கட்டுப்பாடு

    அதற்கு முன்பு வரை மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் வாபஸ் வாங்கப்படுவதாக அறிவித்தார். இந்த நிலையில்தான் இன்று முதல் நாடு முழுக்க முழுமையாக கொரோனா தளர்வுகள் அமலுக்கு வருகின்றன, அனைத்து மாநிலங்களில் இருந்தும் தேசிய அளவில் விதிக்கப்பட்ட பேரிடர் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. இனி நாடு முழுக்க கூட்டங்கள் நடத்த முடியும்.

    கூட்டங்கள் நடத்தலாம்

    கூட்டங்கள் நடத்தலாம்

    திருமணங்களில் கூட்ட கட்டுப்பாடு இல்லை. பள்ளிகள், கல்லூரிகள் இயல்பாக இயங்க முடியும். அதாவது 2 வருடங்களுக்கு முன் இந்தியாவில் கொரோனா காரணமாக போடப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுகிறது. அதே சமயம் மாஸ்க், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிகளை மட்டும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மக்கள் மாஸ்க் தொடர்ந்து அணி வேண்டும்.

    மாஸ்க்?

    மாஸ்க்?

    அதேபோல் கை கழுவுதல், சானிடைசர் பயன்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகள் தொடரும். இருப்பினும் பல மாநிலங்களில் இந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு உள்ளது. மாஹராஷ்டிராவில் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்திலும் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தலைநகர் டெல்லியிலும் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாஸ்க் தளர்வு தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+