பல பெண்கள் நாசம்.. வீடியோ வெளியிட்ட மறுநாளே மாணவி மாயம்.. பாஜக மாஜி மத்திய அமைச்சர் மீது புகார்
டெல்லி: பாஜக சேர்ந்த, முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுவாமி சின்மயானந்த் தங்களை கொடுமைப்படுத்துவதாக கூறி சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்ட சட்டக் கல்லூரி மாணவி திடீரென மாயமாகி உள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள எஸ்எஸ் சட்டக் கல்லூரியின் இயக்குநராக செயல்படுபவர், முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்த். இந்த கல்லூரியின், ஹாஸ்டலில் தங்கி படித்து வருபவர் ஒரு இளம்பெண்.
இவர் கடந்த வாரம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

வாழ்க்கை நாசம்
அந்த வீடியோவில் அவர் கூறுகையில், ஷாஜகான்பூர் பகுதியில் உள்ள எஸ்எஸ் கல்லூரியில் எல்எல்எம், படித்து வருகிறேன். துறவிகள் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெரிய தலைவர், பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து வருகிறார். என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். அவருக்கு எதிராக அனைத்து ஆதாரங்களும் உள்ளன.

மோடி உதவ வேண்டும்
பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் எனக்கு, உதவி செய்யவேண்டும். எனது குடும்பத்துக்கும் கொலை மிரட்டல்கள் வருகின்றன நான் குற்றம் சாட்டுபவர் ஒரு சன்னியாசி. காவல்துறை முதல், மாவட்ட நீதிபதி வரை அனைவருமே அவருக்குத்தான் ஆதரவாக இருப்பதாக கூறி எங்களை மிரட்டி வருகிறார். எனக்கு நீதி வேண்டும். இவ்வாறு அந்த வீடியோவில் அந்தப்பெண் தெரிவித்திருந்தார்.

பெண் மாயம்
ஆகஸ்ட் 23ஆம் தேதி இந்த வீடியோ வெளியான நிலையில், மறுநாளான 24ம் தேதி முதல் அந்தப் பெண் எங்கே இருக்கிறார் என்பதே தெரியாமல் மாயமாகிவிட்டார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில், சுவாமி சின்மயானந்தாவுக்கு, எதிராக புகார் கொடுத்தார். ஆனால் அந்த புகாரை உடனடியாக ஏற்றுக் கொள்ளாமல் சுமார் மூன்று நாட்கள் கழித்து ஏற்றுக்கொண்டது காவல்துறை.

வழக்கு தள்ளுபடி
அதேநேரம் இது போன்று வீடியோவை வெளியிட்டு தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த அந்த மாணவியும் அவரது குடும்பத்தாரும் முயற்சி செய்ததாக சின்மயானந்தா அளித்த புகாரை உடனடியாக காவல்துறை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் ஒரு சம்பவத்தை நினைவு கூறுவது அவசியம். 2011ம் ஆண்டில் சுவாமி சின்மயானந்தாவுக்கு, எதிராக அவரது ஆசிரமத்தில் பல ஆண்டுகளாக தங்கியிருந்த ஒரு பெண் பாலியல் பலாத்கார புகார் மற்றும் கடத்தல் புகார் அளித்திருந்தார். ஆனால் கடந்த ஆண்டு இந்த முதல் தகவல் அறிக்கையை தள்ளுபடி செய்வதாக யோகி ஆதித்யநாத் அரசு அறிவித்தது. இப்போது சட்டக் கல்லூரி மாணவி தந்தை, சின்மயானந்தாவுக்கு எதிராக கடத்தல் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications