Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Goat: எல்லைத் தாண்டிய ஆடு! கொலையில் முடிந்த வாய்த் தகராறு! ஒரே குடும்பத்தினர் 12 பேருக்கு ஆயுள் தண்டனை!

Subscribe to Oneindia Tamil

கோட்டா: வெறும் ஆடு தொடர்பாக ஏற்பட்ட சிறு தகராறு, ஒரு இளைஞரின் கொலையில் முடிந்து, இன்று ஒரு ஒட்டுமொத்த குடும்பத்தையே சிறைக்கம்பிக்கு பின்னால் தள்ளியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த அதிர்ச்சிகரமான வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

Goat
Photo Credit:

கூடுதல் அமர்வு நீதிபதி ஸ்வேதா ஷர்மா, குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.13,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பு அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூர சம்பவம் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி நடந்தது. அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட ஆடு சம்பந்தமான சிறு தகராறு மிகப்பெரிய வன்முறையாக வெடித்து, இறுதியில் ஒருவரின் உயிரை பலிவாங்கியது.

வழக்குத் தரப்பு தகவலின்படி, இஸ்தியாக் மற்றும் யாஷ்பால் என்ற இரண்டு இளைஞர்கள் தகராறை சமரசம் செய்யச் சென்றனர். அங்கே அவர்கள் கத்தி, மரக்கம்புகள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த இஸ்தியாக், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குற்றவாளிகள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என வழக்கறிஞர் ரியாஸ் அகமது தெரிவித்தார்.

முக்கிய குற்றவாளிகளாக ராம்தானி (57), அவரது மனைவி ஃபர்சானா (43), மற்றும் மகன்கள் முக்தார் (31), முஸ்தாக் (29) ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் தண்டனை பெற்ற மற்றவர்கள்: முபாரக் அலி (26), சதாப் கான் (32), ஷாஹீன் கானம் (37), ஷாருக் என்கிற லங்டா (26), ஜாஹிர் கான் (35), நைமுதீன் என்கிற ஷோயப் (26), ஷாதத் என்கிற பாயு (30), மற்றும் ஷாருக் (32) ஆவர்.

இறந்த இஸ்தியாக்கின் உறவினர் சாஹித் ஹுசைன் அளித்த புகாரின்படி, இஸ்தியாக்கின் மாமா அப்துல் அஜீஸ் என்கிற பப்புவிற்கும், அண்டை வீட்டாரான ராம்தானிக்கும் இடையே ஆடு வளர்ப்பது தொடர்பாக மோதல் இருந்து வந்தது. அதைத் தீர்க்க இஸ்தியாக் என்கிற குட்டு, தனது நண்பர்களான யாஷ்பால் மற்றும் காலு என்கிற கமல்ஜீத்துடன் ராம்தானியின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அங்கு நடந்த பேச்சுவார்த்தையின்போது இஸ்தியாக்கும் யாஷ்பாலும் அருகிலுள்ள கடைக்குச் சென்றனர். அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவர்களைக் கூர்மையான ஆயுதங்களால் தாக்கினர். இந்தத் தாக்குதலில் இஸ்தியாக் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, வெவ்வேறு காலகட்டங்களில் குற்றவாளிகளைக் கைது செய்தனர். நீண்டகால விசாரணை மற்றும் சான்றுகள் பரிசீலனைக்குப் பிறகு, நீதிமன்றம் 12 பேரையும் குற்றவாளிகளாக அறிவித்து ஆயுள் தண்டனை வழங்கியது.

கொலை செய்யப்பட்ட இஸ்தியாக் ஹுசைன், ஓய்வுபெற்ற உதவி சப்-இன்ஸ்பெக்டரின் ஒரே மகனாக இருந்தார். அவரது எதிர்பார்க்காத மரணம், குடும்பத்திற்கு ஈடுகட்ட முடியாத துயரத்தையும் பேரிழப்பாகவும் அமைந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+