Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடிச்சு தூக்க போகுது இந்தியா..’இங்கே’ கொட்டி கிடக்குது தங்கக் குவியல்! இனி சீனாவெல்லாம் ஒன்னுமே இல்ல

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகளவில் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கும் நிலையில், தங்கம் எங்கிருக்கிறது என உலக நாடுகள் தேடி வருகின்றன. இந்தியாவின் அண்டை நாடான சீனாவில், தங்கம் இருப்பது தெரிய வந்திருக்கும் நிலையில், உலக அளவில் சீனா பொருளாதார வல்லரசாக மாறும் என கணிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவிலும் தங்க படிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதனை வெட்டி எடுப்பதற்கான ஏலம் விரைவில் தொடங்கவுள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு நாடுகள் மீது வர்த்தக போர் தொடுத்திருக்கிறார். குறிப்பாக சீனா, கனடா, மெக்ஸிகோ, இந்தியா, ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளுக்கு எதிராக பதிலுக்கு பதில் வரி விதிப்பை அமல்படுத்தியுள்ளார்.

Gold India Odisha

இதனால் உலகம் முழுவதும் பொருளாதார பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. அமெரிக்காவை பொறுத்தவரை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3000 டாலரை கடந்திருப்பது கவனிக்கத்தக்கது.

உலக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் ஆபரணத்துக்காகவும் சேமிப்புக்காகவும் தங்கம் வாங்கப்படுகிறது. அதே நேரத்தில் வெளிநாடுகளில் சிறந்த முதலீடாக தங்கத்தில் முதலீடு செய்வது பார்க்கப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகள், சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகளில் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக சீனர்களும் தங்கத்தில் முதலீடு செய்வதை அதிகரித்து வருகின்றனர்.

முதலீடு மட்டும் அல்லாமல், தங்கள் நாடுகளில் தங்கம் இருக்கிறதா என பல உலக நாடுகள் ஆய்வு செய்து வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவின் ஹூனான் மாகாணத்தில் வாங்கு தங்க சுரங்கத்தில் சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்க குவியல் மறைந்து கிடப்பதை சீனா ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இந்த தங்கம் வெட்டி எடுக்கப்படுவதன் மூலம் உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக சீனா உருவாகும் என ஆய்வாளர்கள் கணித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்தியாவிலும் தங்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது பொருளாதாரத்தில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. ஒடிசா மாநிலத்தில் சுந்தர்கர், நபரங்பூர், அங்குள், கொராபுட் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான தங்க படிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஒடிசா மாநில சுரங்கத்துறை அமைச்சரான பிபூதி பூஷன் ஜனா கூறி இருக்கிறார். முதல் கட்ட ஆய்வில் மேற்கண்ட மாவட்டங்கள் மட்டுமல்லாது மால்கன்கிரி, சம்பல்பூர், போத் போட்ட ஆகிய மாவட்டங்களிலும் தங்க படிமங்கள் இருப்பது முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்திருப்பதாகவும், கியோன்ஞ்சர், மயூர் பஞ்ச் போன்ற மாவட்டங்களில் தங்கம் இருக்கிறதா என்பதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

தற்போது வெளியாகி உள்ள தகவல் படி முதன் முறையாக தங்கம் வெட்டி எடுப்பதற்கான ஏலம் தியோகர் பகுதியில் விடப்பட உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஜெசிப்பூர், சரியக்குடா, ருவான்சி, ஐடெல் குச்சா, மருதி, சுளிபட், பதம்பகத் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இங்கெல்லாம் தங்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் தங்கச்சுரங்கத்தில் மையமாக ஒடிசா மாறும். அதுமட்டுமல்லாமல் தாமிரம், மேக்னசைட் உள்ளிட்ட பல்வேறு தனிமங்களும் அங்கு இருப்பது தெரியவந்துள்ளது. இதை எடுத்து முதல் முறையாக ஒடிசா தங்க சுரங்க ஏலத்தை விட திட்டமிட்டு இருக்கிறது. இது ஒடிசா மட்டுமல்லாது, இந்திய அளவில் வரலாற்றில் புதிய மைல்களாக இருக்கும் எனவும், பல்வேறு உலக நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து அதிக அளவிலான முதலீடுகளை ஒடிசா ஈர்க்கும் என கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+