இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு ஃபேவிபிராவிர் மருந்து கொடுத்து டிரையல்!
டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு ஃபேவிபிராவிர் (Favipiravir) என்ற மருந்தை கொடுத்து பரிசோதிக்கலாம் என்று இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி கிடைத்துள்ளது.
Recommended Video
ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் இன்புளூவன்சாவுக்கு இந்த மருந்து நல்ல பலன் அளித்துள்ளது. எனவே இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு அது வழங்கப்பட அனுமதி கிடைத்துள்ளது.
ஃபேவிபிராவிர் மருந்து மூலிகை தாவரத்தில் இருந்து யாரிக்கப்படுகிறது. மத்திய அறிவியல் தொழில்துறை ஆய்வு நிறுவனத்தின் தலைமை இயக்குநர் சேகர் மண்டே இது பற்றி கூறுகையில், டெங்கு சிகிச்சையில் ஃபேவிபிராவிர் மருந்து நல்ல பலன் கொடுத்துள்ளது.
மனிதர்களிடம் டிரையல் செய்வது இரண்டாம் கட்ட ஆய்வில் உள்ளது. இன்னும் ஒன்றரை மாதங்களில் பரிசோதனை முடிந்து விடும். மனிதர்களிடம் எதிர்பார்த்த நல்ல பலன் கிடைத்து விட்டால், மலிவான விலையில் மார்க்கெட்டில் கிடைக்கும் என்றார்.
19 கர்ப்பிணிகள் உட்பட 698 இந்தியர்களுடன்.. மாலத்தீவிலிருந்து கேரளா கிளம்பியது கடற்படை கப்பல்
COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த மருந்து பரிசோதிக்கப்படுவதற்காக, நிறுவனம் இப்போது மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் போட உள்ளது. இந்த டிரையலுக்கு, நோயாளிகளிடமிருந்து ஒப்புதல் அவசியம்.