"பாமாயில்".. சமையல் எண்ணெய் விலை குறையப்போகுது.. மத்திய அரசு சொன்ன குட்நியூஸ்
டெல்லி: நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலையை குறைக்கும் வகையில் மத்திய நிதி அமைச்சகம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்க்கான சுங்க வரியை 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளதால் பாமாயில் உள்ளிட்ட சமையல் எண்ணெய் விலை என்பது குறைய உள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இது நேரடியாக மக்களின் மீது சுமையை ஏற்படுத்தும். அந்த வகையில் சமையல் எண்ணெய் விலை என்பது 24 சதவீதம் முதல் 34 சதவீதம் வரை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வால் நாடு முழுவதும் மக்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட உள்ளது. இந்நிலையில் தான் மக்களின் மீதான சுமையை குறைக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதன்படி பாமாயில், சோயாபீன் எண்ணெய், சன்பிளவர் ஆயில் உள்ளிட்டவற்றின் மீதான சுங்க வரி அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சமையல் எண்ணெய்களுக்கான சுங்கவரி 20 சதவீதமாக இருந்தது. தற்போது இது 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சமையல் எண்ணெய் விலை உயர்வை குறைக்க முடியும் என்பதால் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் பாமாயில், சோயாபீன் எண்ணெய், சன்பிளவர் ஆயில் உள்ளிட்டவற்றின் மீதான வரி மற்றும் கட்டணம் 27.5 சதவீதமாக இருந்த நிலையில் இப்போது 16.5 சதவீதமாக குறையும். இருப்பினும் Refined ஆயில்களின் மீதான வரி, கட்டணம் 35.75 சதவீதமாக தொடர்கிறது.
இதுதொடர்பாக மத்திய உணவு பாதுகாப்பு துறையின் செயலாளர் சஞ்சீவ் சோப்ரா கூறுகையில், ‛‛சமையல் எண்ணெய்களுக்கான அடிப்படை சுங்க வரியை 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார். இந்த வரி குறைப்பு நடவடிக்கை நேற்று முதல் உடனடியாக செயல்பாட்டுக்கு வந்தது.
நம் நாட்டை எடுத்து கொண்டால் மக்களுக்கான சமையல் எண்ணெயில் 50 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த 2024-24ம் ஆண்டில் ஆயில் மார்க்கெட்டிங் ஆண்டில் (நவம்பர் முதல் அக்டோபர்) நம்நாடு ரூ.1.32 லட்சம் கோடி கொடுத்து 159.6 லட்சம் டன் சமையல் எண்ணெயை இறக்குமதி செய்து செய்துள்ளது.
இதில் பாமாயிலை எடுத்து கொண்டால் மலேசியா மற்றும் இந்தோனேஷியாவில் இருந்தும், சோயாபீன் ஆயிலை எடுத்து கொண்டால் பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவில் இருந்தும் நம் நாடு அதிகமாக இறக்குமதி செய்கிறது. தற்போது சுங்கவரியை குறைத்து இருப்பதன் மூலம் அதன் விலை குறைவதோடு, சில்லரை விலையில் வாங்கும் மக்களுக்கும் பணம் மிச்சமாக உள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications