தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்- மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
டெல்லி: மகாராஷ்டிரா, தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் பாதிப்பு அதிகம் இருப்பதாக லோக்சபாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற லோக்சபா மழைக்கால கூட்டத் தொடர் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சபை நடவடிக்கைகள் 1 மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டது.

நீட் குறித்து டிஆர் பாலு
பின்னர் சபை கூடியதும் கேள்வி நேரத்தை மத்திய அரசு ஒத்திவைத்ததற்கு எதிராக காங்கிரஸ் லோக்சபா குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசினார். இதனைத் தொடர்ந்து நீட் தேர்வுகளால் தமிழகத்தில் மாணவர் தற்கொலைகள் அதிகரித்திருப்பது குறித்து திமுக எம்பி டி.ஆர். பாலு சுட்டிக்காட்டினார்.

சீனா ஊடுருவல்- ஆதிர் கோரிக்கை
இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து பேச எழுந்தார். அப்போது குறுக்கிட்ட ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சீனாவின் ஊடுருவல் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் சபாநாயகர் ஓம்பிரிலா இதனை அனுமதிக்க மறுத்தார்.

மாநிலங்களில் அதிகம்
இதன்பின்னர் ஹர்ஷ் வர்தன் தொடர்ந்து பேசியதாவது: மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழகம், தமிழகம், கர்நாடகா, உபி, டெல்லி, மேற்கு வங்கம், பீகார், தெலுங்கானா, ஒடிஷா, கேரளா மற்றும் குஜராத் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. இந்த மாநிலங்கள் அனைத்திலும் கொரோனா பாதிப்பு 1 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது.

5 மாநிலங்களில் 78% பாதிப்பு
நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பில் 78% மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழகம், தமிழகம், கர்நாடகாவில்தான் உள்ளன. உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. நாடு தழுவிய லாக்டவுன் என்பது மத்திய அரசு மேற்கொண்ட மிகவும் திடமான உறுதியான நடவடிக்கை. இவ்வாறு ஹர்ஷ்வர்தன் கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications