ஹத்ராஸ் போகும் வழியில் கைது செய்யப்பட்ட மலையாள பத்திரிக்கையாளர்.. உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு
டெல்லி: ஹத்ராஸ் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்ட கேரளாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளரை விடுதலை செய்ய வேண்டும் என்று, கேரள யூனியன் ஆஃப் ஒர்க் ஜர்னலிஸ்ட்ஸ் (கே.யு.டபிள்யூ.ஜே) உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், கைது நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறப்பட்டுள்ளது.
மலப்புரத்தைச் சேர்ந்த சித்திக் கப்பன், பஹ்ரைச்சின் மசூத் அஹ்மத், முசாபர்நகரைச் சேர்ந்த அதிக்-உர்-ரஹ்மான் மற்றும் ராம்பூரைச் சேர்ந்த முகமது ஆலம் என நான்கு பேரை ஹத்ராஸ் செல்லும் வழியில், மதுரா அருகே, உத்தரபிரதேச போலீசார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.

நான்கு பேர் கைது
கைது செய்யப்பட்ட நான்கு பேரும் ஹத்ராஸ் பலாத்காரம், கொலை சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்கள் மற்றும் பிற வழிகளில் இன, வன்முறையைத் தூண்ட முயன்றனர். இவர்கள், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, உறுப்பினர்கள் என்று உத்தரபிரதேச காவல்துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் பிரசாந்த் குமார் தெரிவித்தார்.

செல்போன் பறிமுதல்
மதுரா ஊரக போலீஸ் கண்காணிப்பாளர் ஷிரிஷ் சந்திரா கூறுகையில், "நாங்கள் அவர்களின் மொபைல்கள் மற்றும் லேப்டாப்புகளை கைப்பற்றியுள்ளோம். அவர்களிடமிருந்து சில சந்தேகத்திற்குரிய புத்தகங்களை பறிமுதல் செய்துள்ளோம். ஆனால் அவர்களில் ஒருவர் பத்திரிகையாளர் என்பதையும் பிறகு தெரிந்து கொண்டோம். இந்த நான்கு பேர் மீதும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 151 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம்
இதனிடையே, முன்னதாக, கே.யு.டபிள்யூ.ஜே தலைவர் மிஜி ஜோஸ் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எழுதிய கடிதத்தில், கைது செய்யப்பட்ட கப்பன் தங்கள் சங்கத்தின் டெல்லி பிரிவு செயலாளராக இருந்தார் என்றும் கப்பன் பல ஊடக நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்து. தற்போது அவர் ஒரு வெப்சைட்டில் பணியாற்றுகிறார். பலாத்காரம் மற்றும் கொலை தொடர்பாக செய்தி சேகரிக்க கப்பன், ஹத்ராஸுக்கு சென்று கொண்டிருந்தார். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆட்கொணர்வு மனு
உச்சநீதிமன்றத்தில் கே.யு.டபிள்யூ.ஜே தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களை மீறி கைது நடவடிக்கை நிகழ்ந்துள்ளது. பத்திரிகையாளர் கடமையை நிறைவேற்றுவது தடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட விஷயமும், கப்பனின் குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும் தெரிவிக்கப்படவில்லை என்று மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications