நாடாளுமன்றத்தை திடீரென ஒத்திவச்சாங்க.. இப்போதான் உண்மை தெரியுது.. பாய்ந்து வந்த காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: யார் பாதுகாக்க வேண்டுமோ அவர் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்கிறார் என்று செபி தலைவரை மறைமுகமாக காங்கிரஸ் மறைமுகமாக விமர்சித்துள்ளது. மேலும், நாடாளுமன்றம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் திடீரென தேதி குறிப்பிடாமல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி பிற்பகலில் ஒத்திவைக்கப்பட்டது ஏன் என்றும் இப்போது புரிகிறது என காங்கிரஸ் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு அதானி மீது ஹிண்டன்பர்க் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியது. எனினும் இது தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் இந்தியாவின் பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையமான செபி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது.

hindenburg adani gautam adani

அதில், செபியின் தலைவர் மாதபி பூரி புச் அதானிக்கு சொந்தமான வெளிநாட்டு பங்குகளில் பணம் முதலீடு செய்துள்ளார். இதன் காரணமாக தான் அதானி மீது அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை பதிவு செய்து இருக்கிறது.

அதாவது செபி -யானது அதானி மீது நடவடிக்கை எடுக்காமல் போனதற்கு செபியின் தலைவர் மாதபி பூரி புச் அதானிக்கு சொந்தமான வெளிநாட்டு பங்குகளில் பணம் முதலீடு செய்தது தான் காரணம் என்றும், இதனால் தான் அதானி குழுமம் எந்த அச்சமும் இன்றி பணிகளை செய்கிறது. இதற்கு செபியின் தலைவர் மாதபி பூரி புச் அதானிக்கு இடையே உள்ள உறவு தான் காரணம் என்றும் அந்த குற்றச்சாட்டில் கூறியிருந்தது.

இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ள அதானி, இந்த அறிக்கை முழுக்க முழுக்க எந்த உண்மையும் இல்லாதது. எங்கள் வாழ்க்கையும் நிதியும் ஒரு திறந்த புத்தகம். எங்களின் முதலீடுகளை நாங்கள் வெளிப்படையாகவே செய்து இருக்கிறோம். எங்களின் முதலீடுகள் பற்றிய அனைத்து தகவல்களும் பல ஆண்டுகளாக செபி-க்கு வழங்கப்பட்டுள்ளன.

நாங்கள் செபிக்கு வருவதற்கு முன்பு முதல் இப்போது வரை அனைத்து காலத்திலும் மேற்கொண்ட நிதி முதலீடுகள் குறித்த விவரங்களை வெளியிட தயாராக இருக்கிறோம். வரும் நாட்களில் இது தொடர்பான முழுமையான விளக்கம் வெளியிடுவோம் என்று அதானி தெரிவித்துள்ளது. செபி தலைவர் மீது ஹிண்டன்பர்க் முன்வைத்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தான் இந்த விவகாரத்தை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசை சாடியுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதவது:-

யார் பாதுகாக்க வேண்டுமோ அவர் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்கிறார் என்று செபி தலைவரை மறைமுகமாக சாடியிருக்கிறார். தொடர்ந்து ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "நாடாளுமன்றம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென தேதி குறிப்பிடாமல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி பிற்பகலில் ஒத்திவைக்கப்பட்டது. ஏன் இப்படி நடந்தது என தற்போது தெரியவருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+