‛நானே விராட் கோலியின் ரசிகன் தான்’.. ஏன் தெரியுமா? மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறிய நச் பதில்! செம
டெல்லி: நான் விராட் கோலியின் ரசிகன் தான் என தனியார் நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். மேலும் அதன் பின்னணி காரணத்தை அவர் கூறியபோது அனைத்து மக்களுக்கும் கைத்தட்டி சிரித்து ஆரவாரம் செய்தனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருப்பவர் ஜெய்சங்கர். தற்போது பல நாடுகளுக்கு பயணம் செய்து இந்தியாவுடனான அந்த நாடுகளில் உறவை வலுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அதேபோல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ரன் மெஷினுமான விராட் கோலிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இத்தகைய சூழலில் தான் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தானும் கிரிக்கெட்டில் விராட் கோலியின் ரசிகன் என தெரிவித்துள்ளார்.
அதாவது டெல்லியில் ரோட்டரி ரைஸ் இன்டர்ராக் ஷன் வித் டெலிகேட்ஸ் என்ற பெயரில் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிற நாடுகள் உடனான உறவு குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.
"I'm also a fan of Virat Kohli..I admire him..to me, he is distilled competitiveness", EAM Jaishankar @DrSJaishankar pic.twitter.com/mCQUfiQeQn
— Sidhant Sibal (@sidhant) December 17, 2023
அப்போது தான் ‛‛நான் விராட் கோலியின் ரசிகன்'' என தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛ நான் விராட் கோலியின் ரசிகன். நான் அவரை மிகவும் ரசிக்கிறேன். ஏனென்றால் என்னை பொறுத்தவரை அரசியல், இருநாடுகளுக்கு இடையோன உறவை பேணிக்காப்பது என்பது மிகவும் சவால் நிறைந்தது. அதேபோல் விராட் கோலி விளையாட்டில் பல சவால்களை எதிர்கொண்டு சாதிக்கிறார். அது அவருக்கே உரித்த குணமாக இருக்கிறது.
போட்டிகளில் பின்னடைவை சந்திக்கும்போது அதில் இருந்து விராட் கோலி மீண்டு வருகிறார். இதனை பலமுறை உலகம் கண்டுள்ளது. நெருக்கடிகளை சமாளித்து விராட் கோலி உயர்ந்து நிற்கிறார். பொதுவாக சர்வதேச விவகாரங்களை கையாளும் தலைவர்களின் குணத்தை கிரிக்கெட்டில் விராட் கோலி பிரதிபலிக்கிறார். இதனால் விராட் கோலி பிடிக்கும்'' என்றார்.
மேலும் அண்டை நாடுகள் உடனான உறவுகளில் இருக்கும் சிக்கல்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஜெய்சங்கர், ‛‛சில அண்டை நாடுகளுடன் பிரச்சனை இருப்பதை நான் நன்கு புரிந்து வைத்துள்ளேன். இதில் பாகிஸ்தான் என்பது விதிவிலக்கு. தற்போதைய சூழலில் நம் அண்டை நாடுகள் இந்தியா உடன் நல்ல அனுபவத்தை பகிர்ந்து கொள்கின்றன. இந்தியா பற்றி நல்ல விதமாக பேசுகின்றன. இருப்பினும் அண்டை நாடுகளுடன் கருத்து வேறுபாடு இருப்பது என்பது இயற்கையான ஒன்று தான். இதனால் அண்டை நாட்டினர் அனைத்து விஷயங்களுடன் நம்முடன் உடன்படுவார்கள் என்பதை எதிர்பார்க்க முடியும்.
மேலும் சீனாவை எடுத்து கொண்டால் தற்போது இருக்கும் நிலையான உறவு போல் இதற்கு முன்பு இருந்ததாக நினைக்கவில்லை. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக இதில் வித்தியாசமான சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிலை என்பது நம்மால் ஏற்படவில்லை. மாறாக எல்லை தொடர்பான ஒப்பந்தத்தை அவர்கள் கடைப்பிடிக்காததால் ஏற்பட்ட விளைவாக உள்ளது. இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள நாம் அச்சப்பட கூடாது'' என்றார்.
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை?












Click it and Unblock the Notifications