Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மன்னிப்பு கேட்பதற்கு நான் சாவர்க்கர் இல்லை" ராகுல் காந்தி ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜனநாயகம் குறித்து பேசியதற்காகவும் அவதூறு வழக்கு தொடர்பாகவும் மன்னிப்பு கேட்கலாமே என்கிறார்கள். மன்னிப்பு கேட்பதற்கு நான் சாவர்க்கர் இல்லை என்று ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி, மோடி பெயர் குறித்து பேசிய கருத்து சர்ச்சை எழுந்தது.

இது தொடர்பாக ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் நேற்று முன் தினம் தீர்ப்பளிக்கப்பட்டது.

 ராகுல் காந்தியின் எம்.பி பதவி

ராகுல் காந்தியின் எம்.பி பதவி

ராகுல் காந்தியின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுவதாகவும் அவருக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. ராகுல் காந்தி மேல் முறையீடு செய்ய ஏதுவாக தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அந்த உறுப்பினரின் மக்கள் பிரதிநிதி பொறுப்பு பறிக்கப்படும். அந்த அடிப்படையில் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது.

 டெல்லியில் ராகுல் காந்தி பேட்டி

டெல்லியில் ராகுல் காந்தி பேட்டி

அதோடு வயநாடு தொகுதி காலி எனவும் அறிவிக்கப்பட்டது. ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் சிறை தண்டனை மற்றும் அதை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவதூறு வழக்கில் தனக்கு தண்டனை விதிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக இன்று ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி மற்றும் மத்தியில் ஆளும் பாஜக அரசை மிகக் கடுமையாக சாடினார்.

எனது பெயர் சாவர்க்கர் இல்லை

எனது பெயர் சாவர்க்கர் இல்லை

அப்போது ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக கூறுவது பற்றி செய்தியாளர்கள் அவரிடம் (ராகுல் காந்தி) கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி , "ஜனநாயகம் குறித்து பேசியதற்காகவும் அவதூறு வழக்கு தொடர்பாகவும் மன்னிப்பு கேட்கலாமே என்கிறார்கள். எனது பெயர் சாவர்க்கர் இல்லை என்றும் நான் காந்தி.. மன்னிப்பு கேட்க மாட்டேன்" என்று ஆவேசமாக கூறினார். இந்துத்வா சித்தாந்தவாதியான சாவர்க்கர் ஆங்கிலேயேரிடம் மன்னிப்பு கேட்டதாக கூறி ராகுல் காந்தி பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் குறித்து விமர்சனங்களை முன்வைத்து அடிக்கடி பேசி வருகிறார்.

பாஜக அச்சம்

பாஜக அச்சம்

தொடர்து பேசிய ராகுல் காந்தி, நான் அடுத்து என்ன பேசப்போகிறேனோ என்பதைக் கண்டு பிரதமர் மோடி அச்சம் அடைந்து இருப்பதாகவும் அதனால்தான் தகுதி நீக்க்கம் செய்யப்பட்டதாகவும் கூறினார். எனக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகவே இருக்கும். வயநாடு தொகுதி மக்கள் என் குடும்பத்தை போன்றவர்கள். தகுதி நீக்கம் குறித்து அவர்களுக்கு கடிதம் எழுதுவேன்.

இந்த தேசத்திற்காக..

இந்த தேசத்திற்காக..

பதவி நீக்கம் எனக்கு கிடைத்த பரிசுதான். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. என்னை நிரந்தரமாக தகுதி நீக்கம் செய்தாலும் நான் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டுதான் இருப்பேன். நான் நாடாளுமன்றத்திற்குள் இருக்கிறேனோ.. இல்லையா.. என்பது முக்கியம் இல்லை. இந்த தேசத்திற்காக நான் போராடிக்கொண்டு இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பாஜகவின் உடனடி ரீப்ளே

பாஜகவின் உடனடி ரீப்ளே

இதற்கிடையே ராகுல் காந்தியின் பேச்சுக்கு உடனடியாக பதிலடி கொடுத்துள்ள பாஜக, பிரதமர் மோடியின் பெயர் குறித்து பேசும் போதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை ராகுல் காந்தி இழிவு படுத்தி விட்டதாகவும் ராகுல் காந்தி மட்டும் இல்லை. 32 தலைவர்கள் இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளது. மேலும், பாஜகவில் இருந்தே ஆறு பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக கூறிய பாஜக, கர்நாடக தேர்தலுக்காக ராகுல் காந்தியை பாதிக்கப்பட்ட நபராக முன்னிறுத்த காங்கிரஸ் முயற்சிப்பதாக விமர்சித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+