சோனியா, ராகுல் கைது செய்யப்பட்டால் காங். இடைக்கால தலைவர் ப.சிதம்பரம்? காமராஜருக்கு பிறகு வாய்ப்பு?
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டால் காங்கிரஸின் புதிய இடைக்கால தலைவராக மூத்த தலைவர் ப.சிதம்பரம் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக பிபிசி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு பங்குகளை யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றியதில் முறைகேடுகள் நடந்துள்ளன; சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது என்பது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை வழக்குகள். இதில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சோனியா, ராகுல் காந்தியிடம் அண்மையில் சுமார் 50 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

சோனியா, ராகுல் காந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். டெல்லியில் அனைத்து காங்கிரஸ் எம்.பி.க்களும் போராட்டம் நடத்தி கைதாகினர். இதனைத் தொடர்ந்து நேஷனல் ஹெரால்டு, யங் இந்தியா அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு இரு அலுவலகங்களும் சீல் வைக்கப்பட்டன.
மேலும் டெல்லியில் திடீரென சோனியா, ராகுல் காந்தி வீடுகள், காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் முன்பாக போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். இதனால் சோனியஆ, ராகுல் காந்தி இருவரும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படக் கூடிய வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் பரவின. நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்தி இருவருக்கும் சிறை தண்டனை உறுதி என திட்டவட்டமாக கூறி வருகிறார் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி. 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வழக்கை கையில் எடுத்தவர் சுப்பிரமணியன் சுவாமி.
இதனிடையே சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால் காங்கிரஸ் கட்சியின் புதிய இடைக்கால தலைவர் யார் என்கிற விவாதம் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், காங்கிரஸ் இடைக்கால தலைவராக வாய்ப்புள்ளது என்கிறது பிபிசி ஊடகம். மேலும் 1964-65; 1966-67-ல் தமிழகத்தைச் சேர்ந்த முதுபெரும் தலைவர் காமராஜர், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தார்; அவருக்குப் பின்னர் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் காங். தலைவராகக் கூடிய சாத்தியம் உள்ளதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications