உ.பி., பீகாரில், ஒரே நாளில் இடி தாக்கி 107 பேர் பலி.. வட கிழக்கு மாநிலங்களுக்கு மழைக்கான ரெட் அலர்ட்
டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த இரு நாட்கள் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை பிறப்பித்துள்ளது. பீகார் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு நாளை முதல் இரண்டு நாட்கள் ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
நாடு முழுக்க பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. அதிலும், குறிப்பாக, உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த இரு தினங்களில் மழை தீவிரமாக பெய்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் பீகார் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் 83 பேர் இடிதாக்கி கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 24 பேர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இடி தாக்கியதில் உயிரிழந்துள்ளனர். ஆக மொத்தம் 24 மணி நேரத்தில் இந்த இரு மாநிலங்களில் மட்டும் 107 உயிரிழப்புகள் நடந்துள்ளன.
உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் அங்கு மீட்பு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications