ஜூன் ஜூலையில் குறைந்த மழை... ஆக., செப்டம்பரில் சூடு பிடிக்குமா.. விவசாயம் செழிக்குமா?
டெல்லி: நடப்பு தென்மேற்கு பருவமழையில் வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இயல்பான மழையே இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் நீண்ட நாட்களில் 97 சதவீத மழை இருக்கும் என்றும், இதில் 9 சதவீதம் கூடலாம் அல்லது குறையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தென்மேற்கு பருவ மழை காலங்களான, ஜூன், ஜூலை மாதங்களில் வடநாட்டில் 18 சதவீதம் குறைந்து இருந்ததாகவும், மத்திய இந்தியாவில் 4 சதவீதம் குறைந்து இருந்ததாகவும், தென் மாநிலங்களில் 12 சதவீதம் குறைந்து இருந்ததாகவும், அதுவே கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 12 சதவீதம் அதிகரித்து இருந்ததாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் சில இடங்களில் நல்ல மழை பெய்து வருவதாலும், விவசாயத்திற்கு என்று கூலி ஆட்கள் அதிகமாக தற்போது கிடைப்பதாலும், கடந்தாண்டில் ஜூலை மாதத்தைக் காட்டிலும் நடப்பாண்டில் 14 சதவீதம் கூடுதலாக காரிப் பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது. வேர்க்கடலை, ஆமணக்கு, கொண்டைக்கடலை, உளுந்து, தினை ஆகியவை அதிகமாக நடவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் இருக்கும் 123 அணைகளிலும் 62.92 பில்லியன் கன மீட்டர் அளவுக்கு போதிய அளவில் தண்ணீர் இருப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 141 சதவீதமும், இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 103 சதவீதம் அதிகமாகும்.

நடப்பாண்டில் அரிசி 26.66 மில்லியன் ஹெக்டேரிலும், பருப்பு வகைகள் 14.83 மில்லியன் ஹெக்டேரிலும், எண்ணெய் வித்துக்கள் 17.53 மில்லியன் ஹெக்டேரிலும், பருத்தி 12.12 மில்லியன் ஹெக்டேரிலும் பயிரிடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்தாண்டைக் காட்டிலும் அதிக நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளன.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications