இம்ரான்கான் கட்சி மாஜி எம்.எல்.ஏ. குடும்பத்துடன் இந்தியாவில் அரசியல் அடைக்கலம் கோருகிறார்!
டெல்லி: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பல்தேவ் குமார் தமக்கு இந்திய அரசு அரசியல் அடைக்கலம் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோர் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. சிறுபான்மையினர் கட்டாய மதமாற்றத்துக்குள்ளாக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பல்தேவ் குமார் குடும்பத்துடன் இந்தியாவிடம் அரசியல் அடைக்கலம் கோரியுள்ளார். இது தொடர்பாக பல்தேவ்குமார் கூறியுள்ளதாவது:
கைபர்-பக்துன்கவா மாகாண சட்டசபைக்கு பாரிகோட் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அத்தொகுதியின் புதிய எம்.எல்.ஏ. 2016-ல் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக என் மீது பொய்யான வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் நீதிமன்றம் கடந்த ஆண்டு இவ்வழக்கில் இருந்து என்னை விடுதலை செய்தது. இது ஒரு சம்பவம் மட்டும் அல்ல. பாகிஸ்தானில் இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது வன்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன. சிறுபான்மை சமூக இளம்பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுகின்றனர்.
முஸ்லிம் ஆண்களை திருமணம் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். இதனால்தான் இந்திய அரசிடம் குடும்பத்துடன் அரசியல் அடைக்கலம் கோரியுள்ளோம். இவ்வாறு பல்தேவ் குமார் கூறினார்.
-
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
"டபுள்" கேம் ஆடி ஏமாற்றிய பாகிஸ்தான்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்.. டிரம்ப் குஷியோ குஷி! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு












Click it and Unblock the Notifications