பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக பேரணி நடத்துகிறாராம் இம்ரான்கான்!
டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளார் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக்கியுள்ளது மத்திய அரசு.

இதையடுத்து பாகிஸ்தான் மற்றும் சீனா ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் பகுதிகளையும் மீட்கும் அதிரடிகளை மத்திய அரசு மேற்கொள்ளக் கூடும் என கூறப்படுகிறது. டெல்லியில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங்கும் இதை உறுதிப்படுத்தியிருந்தார்.
ஏற்கனவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை அந்த நாடு இழக்கும் சூழல் ஏற்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோவும் சுட்டிக்காட்டியிருந்தார். இந்நிலையில் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் காஷ்மீருக்காக மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசியது பாகிஸ்தான்.
இதற்கு இந்திய தரப்பில் பதிலடி தரப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்களை முன்வைத்து பதிலடி கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் திடீரென பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைநகரான முசாஃபர்பாத்தில் நாளை மறுநாள் பேரணி நடத்தப் போவதாக இம்ரான்கான் அறிவித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து இந்த பேரணியை நடத்துகிறாராம் இம்ரான்கான்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அந்நாடு மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களை ஐநா மனித உரிமைகள் ஆணைய கூட்ட வளாகத்தில் மனித உரிமை ஆர்வலர்கள் பலர் அம்பலப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications