தேங்கி கொண்டே போகும் வழக்குகள்.. நீதிபதிகளின் எண்ணிக்கயை அதிகரிக்க ரஞ்சன் கோகோய் வலியுறுத்தல்
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, இந்திய தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகோய் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகோய் எழுதியுள்ள கடிதத்தில், நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை 65 ஆக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து தீர்க்க முறையே அரசியலமைப்பின் 128 மற்றும் 224 ஏ பிரிவுகளின் கீழ், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கலாம் என்றும் கோகோய் பிரதமருக்கு யோசனை தெரிவித்துள்ளார்.
ஒரு நீதிபதி முழுமையாக பரிணாமிக்க நேரம் எடுக்கும், அவர் தனது உயர்ந்த அனுபவத்தின் புதுமையான தீர்வுகளை கண்டறியும் நேரத்தில் அவர் ஓய்வு வயதை நெருங்கி விடுவதாக ரஞ்சன் கோகோய் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், உச்சநீதிமன்றத்திற்குரிய நீதிபதிகளின் முழு எண்ணிக்கையான 31 என்ற எண்ணிக்கையே பல ஆண்டுகளுக்கு பின்னர் சமீபத்தில் தான் எட்டப்பட்டது. தற்போது உச்சநீதிமன்றத்தில் 58,660 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தலைமை நீதிபதி, இந்த எண்ணிக்கை தொடர்ந்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருவதால் அதிகரித்து கொண்டே செல்வதாக கவலை தெரிவித்துள்ளார்.
இதில் 25 ஆண்டுகளுக்கு மேலாக 26 வழக்குகளும், 20 ஆண்டுகளுக்கு மேலாக 100 வழக்குகளும், 15 ஆண்டுகளுக்கு மேலாக 593 வழக்குகளும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக 4,977 வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன் 1988-ம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை18-லிருந்து 26 ஆக உயர்த்தப்பட்டது.
பின்னர் 2009-ல் தலைமை நீதிபதி உட்பட உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 31 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் தற்போது வழக்குகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக்கொண்டே செல்வதால், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து உடனடியாக பரிசீலிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் நாடு முழுவதுமுள்ள 24 உயர்நீதிமன்றங்களில் சுமார் 43 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களில் சுமார் 35 சதவீதம் அதாவது 377 இடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.
அதே போல ஓய்வுபெற்ற நீதிபதிகள் தீர்ப்பாயத்தால் நியமிக்கப்படும்போது 62 வயது தாண்டியவர்களும் 65 வயது வரை பணிபுரியலாம் என்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ரஞ்சன் கோகாய் குறிப்பிட்டுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications