இந்திய சுதந்திர தினம் 2020: தேசிய அளவிலான தேசபக்தி கவிதைப் போட்டியில நீங்க கலந்துக்கங்க
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய அளவிலான தேசபக்தி பாடல் கவிதைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்று தேசப்பக்தியை பறைசாற்றும் பாடல்களை எழுதி வெற்றி பெற்று பரிசுகளை அள்ளுங்கள்
டெல்லி: நாட்டின் 74வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தேசிய அளவிலான தேசபக்தி பாடல் கவிதைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் (CCRT), கலாச்சார அமைச்சின் தன்னாட்சி அமைப்பு அறிவித்துள்ள இந்த போட்டியில் பங்கேற்று தேசப்பக்தியை பறைசாற்றும் பாடல்களை எழுதி வெற்றி பெற்று பரிசுகளை அள்ளுங்கள். 10 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் மட்டுமே இந்த போட்டியில் பங்கேற்க முடியும்.
நாடு சுதந்திர பெறுவதற்கு முன்பு பாரதியும் பாரதிதாசனும் பல கவிஞர்களும் தேசபக்தியை பறைசாற்றும் பல பாடல்களை எழுதியும் பாடியும் மக்களிடையே தேச பக்தியை பெருகச் செய்தனர். நாடு முழுவதும் தேசப்பக்தி பாடல்களைப் பாடியே அந்நிய தேசத்தவர்களை அலற வைத்தனர் நம் விடுதலைப் போராட்ட வீரர்கள்.

நாடு விடுதலை பெற்று 73 ஆண்டுகள் முடிந்து விட்டன. 74வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடப்போகும் இந்த தருணத்தில் மக்களிடையே தேச பக்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டியதன் அவசியம் எழுந்துள்ளது. கொரோனா என்னும் அரக்கனுக்கு எதிராக மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் (சி.சி.ஆர்.டி), சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய அளவிலான தேசபக்தி கவிதை போட்டியை அறிவித்துள்ளது. 10 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்த போட்டியில் பங்கேற்கலாம்.
https://www.mygov.in/task/national-level-patriotic-poem-competition/
தேசிய அளவிலான தேசபக்தி கவிதை போட்டியை எழுதுபவர்கள் பிறந்த தேதி 01.07.2007 முதல் 30.06.2011 வரை பிறந்த குழந்தைகள் தங்கள் உள்ளீடுகளை அனுப்ப தகுதியுடையவர்கள். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு முதல்பரிசு ரூ. 15000, இரண்டாம் பரிசு ரூ. 7500, மூன்றாம் பரிசு ரூ. 5000 ஆறுதல் பரிசு ரூ.2000 வழங்கப்படும். போட்டிக்கான கவிதை அல்லது பாடலை ஆகஸ்ட் 7,2020 இரவு 11.30 மணிவரை பதிவேற்றம் செய்யலாம்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்












Click it and Unblock the Notifications