இந்திய சுதந்திர தினம் 2020: தேசிய அளவிலான தேசபக்தி கவிதைப் போட்டியில நீங்க கலந்துக்கங்க
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய அளவிலான தேசபக்தி பாடல் கவிதைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்று தேசப்பக்தியை பறைசாற்றும் பாடல்களை எழுதி வெற்றி பெற்று பரிசுகளை அள்ளுங்கள்
டெல்லி: நாட்டின் 74வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தேசிய அளவிலான தேசபக்தி பாடல் கவிதைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் (CCRT), கலாச்சார அமைச்சின் தன்னாட்சி அமைப்பு அறிவித்துள்ள இந்த போட்டியில் பங்கேற்று தேசப்பக்தியை பறைசாற்றும் பாடல்களை எழுதி வெற்றி பெற்று பரிசுகளை அள்ளுங்கள். 10 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் மட்டுமே இந்த போட்டியில் பங்கேற்க முடியும்.
நாடு சுதந்திர பெறுவதற்கு முன்பு பாரதியும் பாரதிதாசனும் பல கவிஞர்களும் தேசபக்தியை பறைசாற்றும் பல பாடல்களை எழுதியும் பாடியும் மக்களிடையே தேச பக்தியை பெருகச் செய்தனர். நாடு முழுவதும் தேசப்பக்தி பாடல்களைப் பாடியே அந்நிய தேசத்தவர்களை அலற வைத்தனர் நம் விடுதலைப் போராட்ட வீரர்கள்.
நாடு விடுதலை பெற்று 73 ஆண்டுகள் முடிந்து விட்டன. 74வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடப்போகும் இந்த தருணத்தில் மக்களிடையே தேச பக்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டியதன் அவசியம் எழுந்துள்ளது. கொரோனா என்னும் அரக்கனுக்கு எதிராக மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
பார்சி சமுதாயத்துக்கு 60,000 கொரோனா தடுப்பு ஊசி...சைரஸ் ஒப்புதல்!!
கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் (சி.சி.ஆர்.டி), சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய அளவிலான தேசபக்தி கவிதை போட்டியை அறிவித்துள்ளது. 10 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்த போட்டியில் பங்கேற்கலாம்.
https://www.mygov.in/task/national-level-patriotic-poem-competition/
தேசிய அளவிலான தேசபக்தி கவிதை போட்டியை எழுதுபவர்கள் பிறந்த தேதி 01.07.2007 முதல் 30.06.2011 வரை பிறந்த குழந்தைகள் தங்கள் உள்ளீடுகளை அனுப்ப தகுதியுடையவர்கள். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு முதல்பரிசு ரூ. 15000, இரண்டாம் பரிசு ரூ. 7500, மூன்றாம் பரிசு ரூ. 5000 ஆறுதல் பரிசு ரூ.2000 வழங்கப்படும். போட்டிக்கான கவிதை அல்லது பாடலை ஆகஸ்ட் 7,2020 இரவு 11.30 மணிவரை பதிவேற்றம் செய்யலாம்.