"எங்களோட எல்லைகளை தப்பா காட்டிருக்கீங்க".. சவூதி அரேபியாவை எச்சரித்த இந்தியா!
சவுதி அரேபியாவை இந்தியா எச்சரித்துள்ளது
டெல்லி: இந்தியா குறித்த ஒரு வரைபடத்தில் நமது நாட்டின் எல்லைகள் குறித்து தவறான வரைபடம் இடம் பெற்றிருப்பதாக சவூதி அரேபியாவிடம் இந்தியா தனது கவலையை தெரிவித்துள்ளது.
இது மிகவும் தவறானது என்றும் இதைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் சவூதி அரசிடம் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபிய அரசு புதிதாக 20 ரியால் வங்கி நோட்டை வெளியிட்டுள்ளது... இதில் உலக வரைபடம் இடம் பெற்றுள்ளது.. அதில் இந்தியாவின் எல்லை தவறாக குறிப்பிடப்ட்டுள்ளது. அதாவது ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகியவை இந்தியாவுக்கு சொந்தமானதல்ல என்பது போல தவறான வரைபடம் இடம் பெற்றுள்ளது.
இதையடுத்து சவூதி அரசிடம் இந்தியா தனது ஆட்சபனையை தெரிவித்துள்ளது.. மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா சொல்லும்போது, இதை திருத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இந்தியா கூறியுள்ளது. ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிகள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பிராந்தியங்கள் ஆகும்.
ஆனால் சவூதி வங்கி நோட்டில் தவறான வரைபடம் இடம் பெற்றுள்ளது.. அதை சரி செய்யுமாறு கோரியுள்ளோம் என்றார்.. ஜி20 குரூப்பின் தலைமைப் பொறுப்புக்கு சவூதி வந்ததையடுத்து இந்த புதிய ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது.
இந்த வரைபடத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் யாருக்கும் சொந்தமானதல்ல என்பது போல சித்தரித்துள்ளனர்.. இதனால் பாகிஸ்தான் தரப்பும் அதிருப்தியாகியுள்ளதாம்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications