டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் இருமல் மருந்துகள் உள்ளிட்ட எந்தவொரு சிரப்களையும் இனி மருந்தகங்களில் நேரடியாக வாங்க முடியாது. இதற்கான விதிகளை மத்திய அரசு தற்போது கடுமையாக்கியுள்ளது. இனிமேல் நீங்கள் மருந்தகத்திற்குச் சென்று சிரப் வாங்க வேண்டும் என்றால், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவாக கிளைமேட் மாறுவது, திடீரென தண்ணீரை மாற்றிக் குடிப்பது போன்றவற்றால் சிலருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படும். பெரும்பாலும் சளி தான் ஏற்படும். இந்த சாதாரண சளி ஓரிரு நாட்களில் தானாகச் சரியாகிவிடும். இந்த காலகட்டத்தில் நாம் அருகே உள்ள பார்மஸிக்கு சென்று சிரப் வாங்கி குடிப்போம். அது ஓரளவுக்குப் பலன் கொடுக்கும்.

Cough syrups india

கடுமையாக்கப்பட்ட ரூல்ஸ்

ஆனால், இனிமேல் இதுபோல நேரடியாக பார்மஸிக்கு போய் உங்களால் இருமல் சிரப்களை வாங்க முடியாது. இதற்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது. சமீபத்தில் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், தரமற்ற மற்றும் அசுத்தமான இருமல் மருந்துகளை உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தத் துயரமான சம்பவங்களைத் தொடர்ந்து, சிரப் மருந்துகளின் தரம், உற்பத்தி மற்றும் விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

சட்டத் திருத்தம்

பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு இப்போது சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இது தொடர்பாகச் சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. 1945-ஆம் ஆண்டு மருந்துகள் விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இதற்கு மருந்துகள் (ஐந்தாவது திருத்தம்) விதிகள், 2026 என்று பெயரிடப்பட்டுள்ளது.

மருந்து விதிகளின் 'Schedule K' பிரிவின் கீழ், சில மருந்துகளை மருத்துவர் சீட்டு இல்லாமலேயே விற்க அனுமதி இருந்தது. தற்போது அந்தப் பட்டியலில் இருந்து சிரப் என்ற சொல் நீக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு உடனடியாக அரசிதழில் வெளியிடப்பட்ட நிலையில், இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

சிரப் வாங்க முடியாது

இந்த புதிய மாற்றத்தினால் இனிமேல் சாதாரண சளி அல்லது இருமலுக்கு மருந்தகங்களுக்குச் சென்று நேரடியாக 'சிரப்' வாங்க முடியாது. பதிவுசெய்யப்பட்ட ஒரு மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து, அவர் எழுதித் தரும் மருந்துச் சீட்டைக் காண்பித்தால் மட்டுமே பார்மிசியில் இருந்து சிரப் வாங்க முடியும். எதாவது பார்மஸி இனி மருத்துவர் சீட்டு இல்லாமல் சிரப் விற்பனை செய்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் கருத்து

இந்த திருத்தத்தை கொண்டு வருவதற்கு முன்பாக, கடந்த 2025 டிசம்பர் 30ம் தேதி மத்திய அரசு ஒரு வரைவு அறிக்கையை வெளியிட்டது. அதில் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் கேட்கப்பட்டன. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை பரிசீலித்த பிறகே, மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

மருந்துகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், தரமற்ற மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்கவும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இது சாமானிய மக்களுக்குச் சற்று சிரமமாகத் தெரிந்தாலும், பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு இது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+