இந்தியா-சீனா ராணுவ தளபதிகள் விரைவாக தொடர்பு கொள்ள ஹாட்லைன்.. வடக்கு சிக்கிம் செக்டாரில் அமைப்பு
டெல்லி: வடக்கு சிக்கிம் செக்டாரில் இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையே ஹாட்லைன் அமைக்கப்பட்டுள்ளது.

வடக்கு சிக்கிம் பகுதியிலுள்ள, கொங்க்ரா லா மற்றும், திபெத்திய தன்னாட்சி பிராந்தியத்தின், கம்பா சோங்கிலுள்ள சீன மக்கள் விடுதலை இராணுவம் (பிஎல்ஏ) ஆகியவற்றுக்கு இடையே இந்த ஹாட்லைன் அமைக்கப்பட்டு உள்ளது.
Recommended Video
ஹாட்லைன் இரு நாட்டு எல்லைகளில் நம்பிக்கை மற்றும் நல்லுறவு உணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹாட்லைன் ஆகஸ்ட் 1ம் தேதி திறக்கப்பட்டது. அன்று பிஎல்ஏ தினம் என்பது மற்றொரு சிறப்பம்சமாகும்.
"இரு நாடுகளின் ஆயுதப்படைகள் தரை தளபதிகள் மட்டத்தில் தகவல்தொடர்புக்காக இது பயன்படும்" என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹாட்லைன் தொடக்க விழாவில் இரு தரப்பு தளபதிகளும் கலந்து கொண்டனர், நட்பு மற்றும் நல்லிணக்கத்தின் செய்தி பரிமாறப்பட்டது என்று ராணுவம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி நுழைய முற்பட்ட போது அதை தடுத்த இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியது. கல்வான் பகுதியில் நடைபெற்ற இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கடந்த வருடம் கொல்லப்பட்டனர்.
இதன் பிறகு இரு நாடுகள் இடையே பதற்றம் அதிகரித்தது. சீனநாட்டின் பல்வேறு பொருட்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இப்படியான சூழ்நிலை தொடர்ந்து நிலவிக் கொண்டிருக்கும் நிலையில், ராணுவத்தினர் மத்தியில் அவசர தேவைகளுக்கு ஹாட்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது வடகிழக்குப் பகுதியில் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தி இருப்பதாக சர்வதேச வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
-
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
அயதுல்லா அலி கமேனியின் மகனையும் முடித்த இஸ்ரேல்? உண்மையில் அதிகாரம் யாரிடம்? ஓங்கும் ஐஆர்ஜிசி கை! -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்!












Click it and Unblock the Notifications