சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்!
டெல்லி: இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), கடந்த இரண்டு நாட்களில் மூன்று முக்கியமான ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இதன் மூலம், அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பைக் (Ballistic Missile Defence - BMD) கொண்டுள்ள உலகின் மிக சில நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது.
இந்தியாவுடன் எல்லைகளை பகிர்ந்துக்கொண்டிருக்கும் பாகிஸ்தான் மற்றும் சீனா என இரண்டு நாடுகளும் கூட்டாக செயல்பட்டு வருகின்றன. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியா மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான், சீன ஆயுதங்களை பயன்படுத்தியிருந்தது.

எனவே, இந்தியா உஷார் நிலையில் இருக்கிறது. மட்டுமல்லாது தனது ஆயுத பலத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகத்தான் DRDO, ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது.
ஜூன் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட இந்த சோதனைகளில், இரண்டு இடைமறிப்பு ஏவுகணைகள் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டன. இவை 2,000 கி.மீ முதல் 5,000 கி.மீ வரை பாயும் எதிரி நாட்டு ஏவுகணைகளை நடுவானிலேயே தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை.
இந்த ஏவுகணைகள் வளிமண்டலத்திற்கு உள்ளேயும், விண்வெளிப் பகுதியிலும் சென்று இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் வல்லமை பெற்றவை. இவற்றுடன் சேர்த்து, கடற்படைக்கான நடுத்தர தூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணையின் (NASM-MR) முதல் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இது கடல் மட்டத்திற்கு மிக அருகில் பறந்து சென்று இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது.
இந்தியாவின் 'அயன் டோம்'
இந்தியாவின் இந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு, இஸ்ரேலின் புகழ்பெற்ற 'அயன் டோம்' போன்ற ஒரு பாதுகாப்புக் கவசமாகச் செயல்படும். இது எதிரி நாடுகளின் ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து இந்தியாவைப் பாதுகாக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இந்த வெற்றியின் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் வரிசையில் ஏவுகணை பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் இந்தியா ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக்காக DRDO விஞ்ஞானிகளுக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இந்த சோதனைகள் ஒடிசாவின் சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் நடத்தப்பட்டன.
-
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்!












Click it and Unblock the Notifications