சீனாவின் ஊடுருவல்களுக்கு எல்லையில் சரியான பதிலடி தரப்படுகிறது- ராஜ்யசபாவில் ராஜ்நாத்சிங்
டெல்லி: எல்லையில் ஊடுருவ முயற்சிக்கும் சீனாவின் நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி தரப்படுவதாக ராஜ்யசபாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஏற்பாடுகளுடன் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.

ராஜ்நாத்சிங் அறிக்கை
லோக்சபாவில் செவ்வாய்க்கிழமையன்று சீனாவின் ஊடுருவல் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில் எல்லையில் சீனா ஏப்ரல் மாதம் முதல் எப்படி எல்லாம் படைகுவிப்பில் ஈடுபட்டது என்பதை விவரித்திருந்தார்.

சீனாவுடனான மோதல்
மேலும் கால்வன் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தது தொடர்பாகவும் சீனாவுக்கு கடும் பதிலடி தரப்பட்டதையும் அதில் சுட்டிக்காட்டினார் ராஜ்நாத்சிங். அத்துடன் சீனாவுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளின் விவரங்களையும் பகிரங்கப்படுத்தினார் ராஜ்நாத்சிங்.

நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரிக்கை
இருப்பினும் எல்லை ஊடுருவல் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் விவாதிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. இந்த நிலையில் ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கையில், 6 மாதங்களாக எல்லையில் எந்த ஊடுருவலுமே இல்லை என கூறப்பட்டிருந்தது.

உள்துறையின் பதில்
லோக்சபாவில் ராஜ்நாத்சிங் தாக்கல் செய்த அறிக்கையில், 38 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப் பரப்பை சீனா ஆக்கிரமித்திருக்கிறது என்றார்... சீனாவின் ஊடுருவல்கள் எப்படியெல்லாம் நிகழ்ந்தது என்பதையும் விவரித்திருந்தார். ஆனால் உள்துறை அமைச்சகம் இதற்கு மாறான தகவலை ராஜ்யசபாவில் தெரிவித்தது சர்ச்சையானது.

ராஜ்யசபாவில் இன்று அறிக்கை
இதனிடையே இன்று ராஜ்யசபாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், எல்லையில் ஊடுருவ முயற்சிக்கும் சீனாவின் நடவடிக்கைகளுக்கு இந்தியா தக்க பதிலடி தந்து வருகிறது; சீனாதான் அத்தனை ஒப்பந்தங்களையும் தன்னிச்சையாக மீறி வருகிறது. அருணாசலப் பிரதேசத்தின் 90,000 ச.கி.மீ நிலத்துக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது என விவரித்தார்.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர்












Click it and Unblock the Notifications